வருகிற 17-ம் தேதி பாமக நிர்வாக குழுக் கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், இதுகுறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம், வருகிற 17-ம் தேதி காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். 

இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, அடுத்த கட்ட செயல்பாடுகள், நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட முக்கியமான கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version