சார் விவகாரம் தொடர்பாக விஜய்யின் தவெக கட்சி தொடர்ந்த வழக்கில், மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறப்பு வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் வாக்காளர் விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் பெறப்பட்டு வருகின்றன. இதில் பிஎல்ஓ-க்களாக அரசு ஊழியர்கள் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தவெக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டு இருந்தது. அந்த வழக்கில், கடும் வேலை நெருக்கடி காரணமாக பிஎல்ஓக்களாக பணிபுரிய விரும்பாதோர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 32வது பிரிவின்கீழ் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில், சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கை தவறு என மக்கள் மனதில் கருத்துகளை திணிக்கும் முயற்சியில் சில அரசியல் கட்சிகள் ஈடுபட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, பிறகு உத்தரவுகளை வெளியிட்டது. அப்போது, பிஎல்ஓக்களாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளோரின் பணி சுமையை குறைக்கும் வகையிலும், அப்பணிக்கு கூடுதல் ஊழியர்களை தேர்தல் ஆணையத்திற்கு மாநில அரசுகள் அளிக்க வேண்டும். பணிச்சுமையென கருதி ஊழியர்கள் யாரேனும் பிஎல்ஓ பணிக்கு வர விரும்பாத பட்சத்தில், அந்த பணிக்கு வேறு ஊழியர்களை அமர்த்துவது குறித்து மாநில அரசும், சம்பந்தப்பட்ட துறையும் ஆலோசிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version