Close Menu
    What's Hot

    பேனா நினைவு சின்னம் அமைகிறதா..?? இல்லையா..?? தமிழக அரசுக்கு கெடு விதித்த பசுமைத் தீர்ப்பாயம்..!!

    சாலையில் சாய்ந்த மாங்காய் ஏற்றிவந்த பிக்கப் வாகனம் ; அடியில் சிக்கிய இருவரின் நிலை என்ன?  

    நாளை நீட் மறுதேர்வு..!! இருக்குற ஊர் நாக்பூர்.. ஆனா எக்ஸாம் சென்டர் அபுதாபி-ல..!! மாணவன் ஷாக்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»அமைச்சர் சேகர்பாபுவின் இரட்டை வேடம் – அம்பலப்படுத்திய அதிமுக
    அரசியல்

    அமைச்சர் சேகர்பாபுவின் இரட்டை வேடம் – அம்பலப்படுத்திய அதிமுக

    Editor TN TalksBy Editor TN TalksAugust 15, 2025Updated:August 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6622865 sekarbabu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தனியார்மயப்படுத்தலை எதிர்த்து சென்னை மண்டல தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததே அமைச்சர் சேகர்பாபு-வுக்கு சொந்தமான அறக்கட்டளை தான் என்ற பகீர் தகவலை அதிமுக அம்பலப்படுத்தி உள்ளது.

    பணிநிரந்தரம் கோரியும், தனியார் மயப்படுத்தலைக் கண்டித்து சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 2 மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ரிப்பன் மாளிகைக்கு எதிரே அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கே.என்.நேரு, சேகர்பாபு போன்ற அமைச்சர்கள் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்து வந்தனர்.

    இந்நிலையில் தனியார் அறக்கட்டளை ஒன்று குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடைபெறுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவர்களை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த 12-ந் தேதி இரவு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை, போலீசார் குண்டுகட்டாக தூக்கியும், விரட்டி – விரட்டியும் கைது செய்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கின் பின்னணி குறித்த பகீர் தகவல் ஒன்றை அதிமுக தனது அதிகாரபூர்வ இணையபக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு..

    தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்த தேன்மொழி யார் தெரியுமா?

    திமுக சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகி! இவர் தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டிருக்கும் “தனம் சாரிடபிள் டிரஸ்ட்” யாருடையது தெரியுமா?

    பணி நிரந்தர வாக்குறுதியை நாங்கள் கொடுக்கவே இல்லை என பச்சை பொய் சொன்ன அமைச்சர் சேகர்பாபு உடையது …. இப்போது தெரிந்ததா தூய்மைப் பணியாளர்களை வெளியேற்றியது யார் என்று?

    யாருக்கும் தொந்தரவு செய்யாமல், அமைதியாக போராடி வந்த எளிய மக்களின் மீது கரிசனம் கொள்ளாமல் வெறுப்பை உமிழ்ந்து, காட்டில் இரையை வேட்டையாடும் மனோபாவத்தோடு , நரி தந்திரம் செய்து, அவர்களை நடுஇரவில். காவல்துறையை வைத்து அடித்து வெளியேற்றியுள்ளது திமுக!

    தூய்மைப் பணியாளர்களை வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு, அவர்களை இடையூறாக கருதிய இந்த திமுக ஆட்சியை மக்கள் குப்பையில் வீசத் தான் போகிறார்கள். அதை நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள்..

    இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

    ADMK Sanitation Workers Protest sekarbabu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாகிஸ்தான் : ராணுவத்தில் புதிய படைப்பிரிவு… முக்கிய மைல்கல் என ஷெபாஸ் அறிவிப்பு…
    Next Article சூடுபிடிக்கும் துணை குடியரசுத் தலைவர் போட்டி… ’இந்தியா’ கூட்டணி வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்…
    Editor TN Talks

    Related Posts

    பேனா நினைவு சின்னம் அமைகிறதா..?? இல்லையா..?? தமிழக அரசுக்கு கெடு விதித்த பசுமைத் தீர்ப்பாயம்..!!

    June 20, 2026

    நாளை நீட் மறுதேர்வு..!! இருக்குற ஊர் நாக்பூர்.. ஆனா எக்ஸாம் சென்டர் அபுதாபி-ல..!! மாணவன் ஷாக்..!!

    June 20, 2026

    பள்ளி வகுப்பறைக்குள் ரீல்ஸ்..!! இதை முதல்வர் விஜய்யே ஏத்துக்க மாட்டார்..!! அண்ணாமலை கண்டனம்..!!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பேனா நினைவு சின்னம் அமைகிறதா..?? இல்லையா..?? தமிழக அரசுக்கு கெடு விதித்த பசுமைத் தீர்ப்பாயம்..!!

    சாலையில் சாய்ந்த மாங்காய் ஏற்றிவந்த பிக்கப் வாகனம் ; அடியில் சிக்கிய இருவரின் நிலை என்ன?  

    நாளை நீட் மறுதேர்வு..!! இருக்குற ஊர் நாக்பூர்.. ஆனா எக்ஸாம் சென்டர் அபுதாபி-ல..!! மாணவன் ஷாக்..!!

    பள்ளி வகுப்பறைக்குள் ரீல்ஸ்..!! இதை முதல்வர் விஜய்யே ஏத்துக்க மாட்டார்..!! அண்ணாமலை கண்டனம்..!!

    சட்டமன்ற நிகழ்வுகளை  முழுமையாக நேரலை  செய்யவேண்டும் –  மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.