தவெக தலை​வர் விஜய் கூட்​டணி அமைக்​கா​விட்​டால் பரி​தாப​மான தோல்​வியை சந்​திப்​பார் என்று தமிழருவி மணி​யன் கூறி​னார்.

அவரது காம​ராஜர் மக்​கள் கட்​சி​யை, தமாகா​வுடன் இணைக்​கும் நிகழ்ச்​சி​ ஈரோட்​டில்  நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற தமிழருவி மணி​யன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

மக்​கள் நலக் கூட்​ட​ணியை நான் உரு​வாக்​க​வில்​லை. அதில் காந்​திய மக்​கள் இயக்​கம் இடம் பெற​வில்​லை. விஜய​காந்தை முதல்​வ​ராக முயற்​சித்​தேன் என்​பதும் தவறான தகவல். மாற்று அரசி​யலை உரு​வாக்​கு​வோம் என்று ரஜினி சொன்​ன​தால்​தான் அவருடன் இணைந்து செயல்​பட்​டேன்.

விஜய்க்கு கொள்கை எதிரி, அரசி​யல் எதிரி யார் வேண்​டு​மா​னாலும் இருக்​கலாம். வரக்​கூடியது சட்​டப்​பேர​வைத் தேர்​தல். அந்த தேர்​தலில் அரசி​யல் எதிரியை வீழ்த்த விஜய் முயற்​சிக்க வேண்​டும். அவரது அரசி​யல் எதிரி​யான திமுகவை வீழ்த்த, வலிமை​யான கூட்​ட​ணி​யில் விஜய் இடம்​பெற வேண்​டும்.

ஆந்​தி​ரா​வில் சிரஞ்​சீவி கட்சி தொடங்​கிய​போது மாநிலமே குலுங்​கியது. ஆனால், பின்​னர் பரி​தாப​மான சூழ்​நிலை​யைத்​ தான் சிரஞ்​சீவி சந்​தித்​தார்.

விஜய் கூட்​டத்​தைக் கலைக்க காவல் துறை முனைகிறது. தேர்​தல் நேரத்​தில் திமுக பல சித்​து​விளை​யாட்​டு​களை அரங்​கேற்​றும். அதை சமாளிக்க முடி​யாது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version