Close Menu
    What's Hot

    மோசமடையும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை..!! 20வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்..!!

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு பயணம்..!! 2 தமிழக அமைச்சர்களுக்கு மத்திய அரசு ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»“அதிமுகவினர் கட்சி மாறவில்லை; ‘கிளை’தான் மாறி இருக்கிறார்கள்” – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
    அரசியல்

    “அதிமுகவினர் கட்சி மாறவில்லை; ‘கிளை’தான் மாறி இருக்கிறார்கள்” – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    udayanithi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    “அதிமுகவின் மூத்த தலைவர்கள் கூட பாஜகவிடம் எந்தக் கட்சியில் சேரலாம் என அனுமதி வாங்கிவிட்டுதான் சேர்கிறார்கள்” என ஈரோட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
    தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் புதிய திராவிட கழகம் சார்பில் நடைபெற்ற ‘வெல்லட்டும் சமூகநீதி’ மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “ஈரோட்டில் இருந்து வெளியான ‘குடியரசு’ இதழில்தான் அண்ணா, கலைஞர் போன்றோர் பயிற்சி பெற்றார்கள். அந்தப் பயிற்சியின் மூலம் தமிழ்நாட்டில் அனைத்து சமுதாயத்திற்கும் சமூகநீதியின் வெளிச்சம் ஏற்பட்டுள்ளது” என்று பெருமிதம் தெரிவித்தார்.
    திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே டெல்லியிலிருந்து உருட்டலும், மிரட்டலும் வருவதாகவும், லோக்கலில் இருக்கும் சங்கிகள் சிலரால் அவதூறுகளும், வன்மமும் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
    கலைஞரின் வரையறையை மேற்கோள் காட்டி, “மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், நாட்டினால் இந்தியர்கள்” என திமுகவின் நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.
    “திராவிடம் என்ற சொல் பெரியார், கலைஞர் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது அல்ல; 1856-இல் கால்டுவெல் அவர்களாலேயே அது சுட்டிக்காட்டப்பட்டது” என்று ஆய்வுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
    “தெளிவான ஆய்வுகள் இருந்தும், சில ‘சங்கிகள்’ திராவிடத்தின் மீது களங்கத்தைக் கற்பிக்கிறார்கள், குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். முன்பு உள்ளூர் சங்கிகள் செய்த வேலையை இப்போது ஆளுநரே செய்கிறார்.” என்றார்.
    ஆளுநர் ‘திராவிடம்’ என்ற சொல்லை கொச்சைப்படுத்தியது குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி தன்னிடம் பதில் கேட்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
    “எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பெயரில் உள்ள ‘திராவிடம்’ என்ற சொல்லை விட்டுக்கொடுத்துவிட்டார். அந்தப் பெயரையே அவர் மறந்துவிட்டார். எம்.ஜி.ஆர், பெரியார் போன்றோரையும் மறந்துவிட்டார். தற்போது எடப்பாடி பழனிசாமியின் மனதில் நிறைந்து இருப்பவர் அமித்ஷா மட்டுமே.”
    “அதிமுகவில், அமித்ஷாவிற்கு சிறந்த அடிமை யார் என்பதில் போட்டி உள்ளது. எடப்பாடி எட்டு அடி பாய்ந்தால், மற்றவர்கள் பதினாறு அடி பாயத் தயாராக உள்ளனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மாற்றுக்கட்சியில் சேர்ந்ததற்குக் காரணம் டெல்லியின் ஆலோசனைதான் என்றும், யார் எந்தக் கட்சியில் சேர வேண்டும் என முடிவு செய்வது டெல்லி தலைமைதான். அதிமுகவினருக்கு டெல்லியில் உள்ள அமித்ஷா வீடு தான் தலைமை அலுவலகம் (Head Office) என்றும் துணை முதல்வர் விமர்சித்தார்.
    “தற்போது யாரும் கட்சி மாறவில்லை. அவர்கள் கட்சி மாறவில்லை, ‘கிளை’ (Branch) தான் மாறி உள்ளார்கள்” என்று கிண்டல் செய்தார். பாஜகவின் அரசியல் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், “யார் வந்தாலும் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. பாஜக முன்னேறியவர்களை பின்னோக்கித் தள்ளுகிறது.” என்றார்.
    திமுகவிற்கு வாக்களிக்கும் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் வாக்குகளைப் பறிக்கவே பாஜக முயற்சிப்பதாகவும், அவர்களின் ஓட்டுகளைப் பாதுகாப்பது திமுகதான் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிறையில் இம்ரான்கான் உயிரோடு இருக்கிறார்: பிடிஐ கட்சி
    Next Article டிசம்பர் மாதத்தில் 18 நாட்கள் வங்கிகள் இயங்காது!. முழு லிஸ்ட் இதோ!.
    Editor TN Talks

    Related Posts

    “பாமக வாக்கு வங்கி சரிவு; அன்புமணியை தலைவராக ஏற்க முடியாது”

    July 16, 2026

    மத்திய அரசு விழாவில் மேயர் பிரியா… பாஜக – திமுக கூட்டணி  நிஜமாகிறதா?  

    July 16, 2026

    தமிழகத்தில் தலைவிரித்தாடும் ஊழல், கஞ்சா, மணல் கடத்தல்..!! Ex. அமைச்சர் ரகுபதி காட்டம்..!!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மோசமடையும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை..!! 20வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்..!!

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு பயணம்..!! 2 தமிழக அமைச்சர்களுக்கு மத்திய அரசு ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்!

    மக்கள் தொகை கணக்கெடுப்பு: வீடுகள் கணக்கெடுக்கும் முதல் கட்டப் பணி இன்று ஆரம்பம்..!!

    போன உசுரு திரும்ப வருமா..?? இதெல்லாம் வேணாம்..!! அரசு சலுகைகளை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.