Close Menu
    What's Hot

    மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? – அரசுக்கு வைகோ வேண்டுகோள்

    பள்ளிகள் திறப்பு!. மாணவச் செல்வங்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

    ’கருப்பு’ படத்தில் ஆர்யா நடித்திருந்தாரா? கேமியோ பகுதி நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»இந்தியா வர மறுக்கும் வங்கதேசம்!. எச்சரிக்கை விடுத்த ஜெய்ஷா!
    விளையாட்டு

    இந்தியா வர மறுக்கும் வங்கதேசம்!. எச்சரிக்கை விடுத்த ஜெய்ஷா!

    Editor web3By Editor web3January 7, 2026Updated:January 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bangladesh jay shah
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த 2 பேர் அடித்துக் கொல்லப்பட்டத்தை அடுத்து, இந்தியாவில் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன. இந்த எதிர்ப்பலைகள் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்க கூடாது என்றும், மீறினால் போட்டி நடத்தும்போது ஆடுகளத்தை பெயர்த்தெடுப்போம் என்றும் ஆன்மிக தலைவர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் அரசியல் தலைவர்கள் பல்வேறிடமிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன.

    இந்தசூழலில் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூரை ரிலீஸ் செய்யுங்க என கேகேஆர் நிர்வாகத்திற்கு பிசிசிஐ அறிவுறுத்திய நிலையில், கடந்த 4ம் தேதி அதிகாரப்பூர்வமாக முஸ்தஃபிசூர் ரஹ்மானை வெளியேற்றியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

    இந்நிலையில் முஸ்தஃபிசூரை வெளியேற்றியதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம், இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க வரமாட்டோம் என தெரிவித்து ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளது.

    அக்கடிதத்தில், “தற்போதைய சூழ்நிலை மற்றும் இந்தியாவில் வங்கதேச அணியின் பாதுகாப்பு குறித்து வளர்ந்து வரும் கவலைகளைத் தொடர்ந்து, வங்கதேச அரசாங்கத்தின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு, தற்போதைய சூழ்நிலையில் வங்கதேச கிரிக்கெட் அணி போட்டிக்காக இந்தியாவுக்கு பயணம் செய்யாது என்று இயக்குநர்கள் குழு முடிவு செய்தது.

    வங்காளதேச வீரர்கள், அணியின் அதிகாரிகள் மற்றும் வாரிய உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அணி பாதுகாப்பான சூழலில் போட்டியில் பங்கேற்க முடியும் என்பதை உறுதி செய்யவும் இதுபோன்ற ஒரு நடவடிக்கை அவசியம் என்று வாரியம் நம்புகிறது. ஐ.சி.சி இருக்கும் நிலைமையைப் புரிந்துகொண்டு இந்த விஷயத்தில் விரைவாக பதிலளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில், இந்தியாவில் பாதுகாப்பில்லை என கூறி தங்கள் அணி பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வங்கதேசம் கோரிக்கை வைத்த நிலையில், இதுதொடர்பாக, ஜெய்ஷா தலைமையில் ஐசிசி கூட்டம் நடைபெற்றது. அப்போது, வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக, விவாதிக்கவே முடியாது என ஐசிசி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாம். ஒருவேளை, டி20 உலகக் கோப்பையை புறக்கணித்தால், பெரிய அளவிலான தண்டனைகள் கிடைக்கும் எனவும் இந்த தொடரில் விளையாடவில்லையென்றால், போட்டிகளுக்கான புள்ளிகளை இழக்கும். இதனால் தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படலாம் என ஐசிசி எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாடிவாசலுக்கு ரெடியா?. ஜல்லிக்கட்டு முன்பதிவு இன்று தொடக்கம்!.
    Next Article பொங்கல் பரிசு தொகுப்பில் குறையா?. புகார் எண்கள் அறிவிப்பு!. தமிழக அரசு அதிரடி!
    Editor web3
    • Website

    Related Posts

    மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? – அரசுக்கு வைகோ வேண்டுகோள்

    June 4, 2026

    பள்ளிகள் திறப்பு!. மாணவச் செல்வங்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

    June 4, 2026

    ’கருப்பு’ படத்தில் ஆர்யா நடித்திருந்தாரா? கேமியோ பகுதி நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? – அரசுக்கு வைகோ வேண்டுகோள்

    பள்ளிகள் திறப்பு!. மாணவச் செல்வங்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

    ’கருப்பு’ படத்தில் ஆர்யா நடித்திருந்தாரா? கேமியோ பகுதி நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

    மேட்டூர் அணை திறப்பு எப்போது?. முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!

    மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்: அதிர்ச்சி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.