உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள கனடா அணியும், கத்தார் அணியும் வான்கூவரில் இன்று மோதின.
தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய கனடா அணியில் ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் சைல் லார் முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பாதைக்கு அழைத்து சென்றார். தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜொனாதன் டேவிட் தனது முதல் கோலை பதிவு செய்தார்.
இதனையடுத்து கத்தார் அணியின் அனைத்து கோல் முயற்சிகளையும் கனடா வீரர்கள் முறியடித்தனர். முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் மீண்டும் ஜொனாதன் டேவிட் மீண்டும் கொல் அடித்து அசத்தியதன் மூலம் கனடா அணி முதல் பாதி முடிவில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் கனடா அணி முழுமையான ஆதிக்கம் செலுத்தியது. 64-வது நிமிடத்தில் நாதன் சலிபா கோல் அடித்து அணியின் முன்னிலையை 4-0 ஆக உயர்த்தினார். அணிக்கு ஒரு கோலையாவது அடித்து தர வேண்டும் என கத்தார் வீரர்கள் எவ்வளவோ முயன்றும் அவர்களால் ஒரு கோலை கூட அடிக்க முடியவில்லை.
75-வது நிமிடத்தில் கத்தார் வீரர் முகமது மனாய் அடித்த பந்து ஓன் கோலாக மாறியதால், கனடாவின் கோல் எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது. பின்னர் ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் மீண்டும் ஜொனாதன் டேவிட் தனது ஹாட்ரிக் கோலை பதிவு செய்தார். இதனால் கனடாவின் கோல் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்தது. இறுதியில் ஆட்ட நேர முடிவில் கனடா அணி 6-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வாஷ் அவுட் செய்து அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் டிரா செய்திருந்த கனடா, இந்த வெற்றியின் மூலம் குரூப் பி பிரிவு புள்ளிப்படியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
