மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணிக்கு 285 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை இந்தியா வெற்றி கொண்டது. அதை தொடர்ந்து இன்று ராஜ்கோட்டில் 2வது ஒருநாள் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் முதலில் பேட்டிங் செய்த ரோஹித் சர்மா 24 ரன்களும், சுப்மன் கில் 56 ரன்களும் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய கோலி 23 ரன்களும், ஷ்ரேயாஸ் 9 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். தொடர்ந்து ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் மற்றும் ஜடேஜா ஆட்டத்தை நிதானமாக ஆடினர். இதில் பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
