23-வது ஃபிஃபா உலகக் கோப்பை தொடரானது அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில், 12 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளும், 3வது இடத்தில் இருக்கும் சிறந்த 8 அணிகளும் சேர்ந்து மொத்தம் 32 அணிகள் நாக் – அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

அந்த வகையில், நேற்று இந்திய நேரப்படி 10.30 மணிகு நடைபெற்ற ’கே’ பிரிவு லீக் ஆட்டத்தில் ரொனால்டோ தலைமைஇயிலான போர்ச்சுக்கல் அணியும், டி.ஆர் காங்கோ அணியும் மோதின. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால், ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 52 ஆண்டுகளுக்கு பிறகு காங்கோ அணி உலகக் கோப்பை கால்பந்து தொடரில் முதல் கோல் அடித்து வரலாற்று சாதனையை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் காங்கோ அணியில் இடம்பெற்ற சாமுவேல் முத்துசாமி எனும் தமிழ் மரபு சார்ந்த வீரர் விளையாடி இருந்தார். ஆட்டத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை நடுக்கலத் தடுப்பு வீரராகச் சிறப்பாக செயற்பட்டிருந்தார். போர்ச்சுக்கல் அணி எளிதாக வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கோ அணி வீரர்கள் எதிர் அணியினரின் ஊடுருவலை காங்கோவின் பின்கள வீரர்கள் சிறப்பாக கட்டுப்படுத்தினர். இதில் முத்துசாமியின் பங்களிப்பு அதிகமாக இருந்தது எனலாம்.

29 வயதான நடுகள வீரரான சாமுவேல் முத்துசாமி பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர். இவரது தாய் காங்கோ நாட்டையும், தந்தை கரீபியன் தீவுகளில் ஒன்ரான குவாதலூப்பை பூர்வீகமாக கொண்ட தமிழ் வம்சாவளி ஆவார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version