டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி நாட்டின் பெருமையை உயர்த்துவதே தனது வாழ்நாள் இலக்கு என்று இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது, இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரை வைபவ் சூர்யவன்ஷி நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது கிரிக்கெட் குறித்துப் பகிர்ந்துகொண்ட அவர், “கிரிக்கெட் விளையாட்டின் அனைத்து வடிவங்களையும் விட ‘டெஸ்ட் கிரிக்கெட்’ தான் மிகச் சிறந்த, உண்மையான வடிவம் என்று எனது தந்தை எனக்கு எப்போதும் கூறுவார். அதனால், டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே எனது முதன்மை இலக்கு” என்று குறிப்பிட்டார்.
பொதுவாகத் தனது இயல்பான ஆட்டத்தில் அதிரடியைக் காட்டி ரன்களைக் குவிக்கும் அசாத்திய திறமை கொண்டவர் வைபவ் சூர்யவன்ஷி. இருப்பினும், சூழலுக்கு ஏற்பத் தம்மால் டெஸ்ட் கிரிக்கெட்டிற்குத் தேவையான நிதானத்துடனும், பொறுப்புடனும் விளையாட முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
டி20 மற்றும் ஐபிஎல் போன்ற அதிரடி ஆட்டங்களின் மீதே இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டி வரும் வேளையில், இளம் வீரர் வைபவ் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசியிருப்பது கிரிக்கெட் விமர்சகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
