Close Menu
    What's Hot

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    தள்ளிப்போகும் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்!. என்ன காரணம்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»U-19 ஆசியக் கோப்பை!. வைபவ் சூர்யவன்ஷி 171 ரன்கள் விளாசல்!. 433 ரன்கள் குவித்த இந்திய அணி!.
    விளையாட்டு

    U-19 ஆசியக் கோப்பை!. வைபவ் சூர்யவன்ஷி 171 ரன்கள் விளாசல்!. 433 ரன்கள் குவித்த இந்திய அணி!.

    Editor web3By Editor web3December 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    U19 Asia Cup Vaibhav Suryavanshi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2025 யு19 ஆசியக்கோப்பை தொடரின் யுஏஇ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியின் மிரட்டல் ஆட்டத்தால் இந்திய அணி 433 ரன்கள் எடுத்துள்ளது.

    ஆண்கள் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை 2025 இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கமாக அமைந்தது. துபாயில் உள்ள ஐ.சி.சி அகாடமி மைதானத்தில் நடந்த முதல் போட்டியிலேயே இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக விளையாடினார். டி20 வடிவத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்த சூர்யவன்ஷி, இப்போது ஒருநாள் போட்டியிலும் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்,

    2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் இன்று (டிசம்பர் 12) தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதிவரை துபாயில் நடைபெறுகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாள், மலேசியா, யுஏஇ, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின. இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரூப் ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா அணிகளும், குரூப் பி-ல் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, மலேசியா அணிகளும் இடம்பிடித்துள்ளன. இந்நிலையில் இன்று தொடங்கிய ஆசியக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி – யுஏஇ அணிகள் விளையாடுகின்றன.

    முதலில் டாஸ் வென்ற யுஏஇ அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி-ஆயுஷ் மாத்ரே ஆகியோர் களமிறங்கினர். கேப்டன் ஆயுஷ் மாத்ரே 4 ரன்களில் ஆட்டமிழந்தாலும், சூர்யவன்ஷி தனது கிளாசிக் ஷாட்களையும், பவர்-ஹிட்டிங் திறமையையும் வெளிப்படுத்தினார். வெறும் 30 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், பின்னர் 56 பந்துகளில் ஒரு பரபரப்பான சதத்தை அடிக்க கியரை மாற்றினார். தொடர்ந்து 14 சிக்சர்கள் 9 பவுண்டரிகளை பறக்கவிட்ட சூர்யவன்ஷி 95 பந்துகளில் 171 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 433 ரன்களை சேர்த்துள்ளது இந்திய அணி.

    இதையடுத்து களம் இறங்கியுள்ள யுஏஇ அணி தற்போதைய நிலவரப்படி, 3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 19 ரன்களுடன் விளையாடி வருகிறது.

    india 433 runs U-19 Asia Cup Vaibhav Suryavanshi smashes
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2028 ஒலிம்பிக்கில் களமிறங்கும் வினேஷ் போகத்!. ஓய்வு முடிவை வாபஸ் பெற்றார்!. உணர்ச்சிப்பூர்வ பதிவு!
    Next Article கர்ப்பப்பை வாய் புற்றுநோய்!. தமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களில்தான் அதிக பாதிப்பு!. அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
    Editor web3
    • Website

    Related Posts

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025

    ஆசிய இளைஞர் பாட்மிண்டனில் பதக்கம் வென்ற தமிழக பாரா வீரர்களுக்கு பாராட்டு விழா

    December 23, 2025

    ஃபிபா தரவரிசையில் ஸ்பெயின் முதலிடம்

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    தள்ளிப்போகும் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்!. என்ன காரணம்?

    அரசியலுக்கு வராமலேயே நல்லது செய்ய முடியும்: சிவராஜ்குமார் கருத்து

    திமுக விருப்ப மனு விநியோகம் எப்போது?. வெளியான அப்டேட்!

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? அன்புமணி சரமாரி கேள்வி

    December 23, 2025

    இந்தியாவில் ஆன்லைன் விசா முறையை அறிமுகப்படுத்திய சீனா!.

    December 23, 2025

    26-ம் தேதி தலைமைச் செயலாளர்கள் மாநாடு! மோடி தலைமையில் ஆலோசனை

    December 23, 2025

    பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… நாளை முதல் அரையாண்டு விடுமுறை

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.