டி20 மகளிர் உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பிரிஸ்டாலில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 126 ரன்கள் குவித்தது. குல் ஃபெரோஷா 52 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். ஆயிஷா ஜாஃபர் 32 ரன்களும், முனீபா அலி 12 ரன்களும் சேர்த்தனர். நெதர்லாந்து தரப்பில் ஐரிஸ் ஸ்விலிங் 2 விக்கெட்டுகளும், மற்ற வீராங்கனைகள் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, 18 ஓவர்களில் 89 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. பாபெட் டி லீட் 30 ரன்கள், ஹீதர் சிகர்ஸ் 24 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் ஃபாத்திமா சனா மற்றும் ஆயிஷா ஜாஃபர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர். நடப்பு தொடரில் இதுவரை 4 போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் அணி, கடைசி லீக் போட்டியில் இந்த ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version