கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் சாட்சி விசாரணை வரும் 24 ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
கோவை மாவட்டம் சூலூரில் கடந்த மே மாதம் 21 ம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கார்த்திக் மற்றும் அவருக்கு உதவிய மோகன்ராஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இருவருக்கு 819 பக்க குற்றபத்திரிக்கை வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து இன்று இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி, சாட்சி விசாரணை வரும் 24 ஆம் தேதி முதல் துவங்க உத்திவிட்டார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் வரும் 24 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்திரவிட்டார். சிறுமி கொலை வழக்கில் விரைவாக குற்றபத்திரிக்கை தாக்கல் செய்த போலீசார் , வழக்கை விரைவாக நடத்தி குற்றவாளிகள் இருவருக்கும் அதிகபட்ச தண்டணை பெற்று தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
