தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற சுமார் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின் போது, முறையான இந்திய குடியுரிமை இல்லாத நிலையில், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்த குற்றத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்குத் திரும்ப முயன்றபோது, இவர்களது விரலில் இருந்த அழியாத மை அடையாளத்தை வைத்து சென்னை மற்றும் மதுரை சர்வதேச விமான நிலையங்களில், குடிவரவு அதிகாரிகள் இவர்களைப் பிடித்து கைது செய்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்தவர்கள், பிரிட்டன், கனடா, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் என 25 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் எவ்வாறு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.இந்தச் சம்பவம், தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு அமைப்புகள் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது

