தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மிகத் தீவிரமான நிலையை எட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மதியம் 3 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 70% வாக்குகள் பதிவாகியுள்ளன. மதிய நேர வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருவதால், பல மாவட்டங்களில் வாக்குப்பதிவு சதவீதம் எதிர்பார்த்ததை விட மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளது.

குறிப்பாக, சென்னை போன்ற நகர்ப்புறங்களில் 68.13% வரை வாக்குகள் பதிவாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1 மணி நிலவரப்படி 56.81 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் 70 சதவீதத்தை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு இந்த முறை மிக அதிகமாக இருப்பதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதே வேகம் தொடர்ந்தால், தேர்தலின் முடிவில் தமிழகம் தனது முந்தைய வாக்குப்பதிவு சாதனைகளை முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் கணித்துள்ளனர்.

மேலும், முதலமைச்சர் வேட்பாளர்கள் தொகுதிகளில் 3 மணிக்கு வாக்குப்பதிவு நிலவரத்தின் அடிப்படையில், திமுகவின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 70.24%, அதிமுகவின் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் 75.84%, காரைக்குடி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீமானின் தொகுதியில் 61.84%, தவெக வேட்பாளர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் 71.84%, தவெக வேட்பாளர் விஜய்யின் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் 68.02% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version