Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால பெருமாள் கோயில் கண்டுபிடிப்பு
    தமிழ்நாடு

    800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால பெருமாள் கோயில் கண்டுபிடிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 28, 2025Updated:November 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tmpp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிவகங்கை திருப்புவனம் அருகே உள்ள அம்பலத்தாடி கிராமத்தில், சுமார் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால பெருமாள் கோயில் அமைந்திருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    சிவகங்கை மாவட்டம், அம்பலத்தாடி கிராமத்தில் சமீபத்தில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இங்கு சுமார் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால பெருமாள் கோயில் அமைந்திருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து, அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு வரும் மதுரை காமராசர் பல்கலைக்கழக முதுகலை மாணவர் வினோத், கூறுகையில், “இந்த கிராமம் பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில், சதுர்வேதி மங்கலமான பிராமண குடியிருப்பாக இருந்ததாகத் தெரிய வருகிறது. அப்போது வழிபாட்டில் இருந்த பெருமாள் கோயில் காலப்போக்கில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து விட்டது. ஆய்வின்போது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர்காலக் கல்வெட்டுத் துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்து, ‘ஒன்று’ என்ற ஒரே சொல்லை மட்டுமே வாசிக்க முடிந்து உள்ளது.

    மேலும், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட சிலைகள் உருக்குலைந்து சிதைந்த நிலையில் கிடைத்துள்ளன. 72 செ.மீ உயரத்துடனும், 38 செ.மீ அகலத்துடனும் காணப்படும் பெருமாள் சிலையில் சங்கு, சக்கரம் தெளிவாக வடிக்கப்பட்டிருப்பது காணப்படுகிறது. ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் முற்றிலும் உடைந்த நிலையில் உள்ளன. தலைக்கிரீடம் அணிந்த கருடாழ்வார் சிலையும் தொடை முதல் கீழ் பகுதி உடைந்து கிடக்கிறது.” என தெரிவித்தார்.

    தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, ” அம்பலத்தாடி கிராமத்தில் முன் காலத்தில் இருந்த கோயில் அழிவுற்ற நிலையில், பின்னர் மீண்டும் கட்டப்பட்டிருக்கலாம். தற்போது கிடைத்த சிலைகள் வெவ்வேறு காலத்தைச் சார்ந்திருப்பதால் இதை உறுதிப்படுத்த முடிகிறது.” என தெரிவித்தார்.

    மேலும், ஊரின் பல இடங்களில் கோயிலின் கல் பாகங்கள் சிதறிக் கிடப்பதாகவும், ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதூத்துக்குடியில் நீடிக்கும் கனமழை – மருத்துவமனைக்குள் புகுந்த தண்ணீர்
    Next Article ‘சென்னை ஒன்’ செயலி வாயிலாக மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.