தமிழகத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக், இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, வேட்பாளர் தேர்வு குறித்து நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர், கட்சிக்காக உழைத்த ஒரு அடிமட்டத் தொண்டரை அங்கீகரித்துள்ளதாகத் தெரிவித்தார். வேட்புமனுவில் கிறிஸ்டோபர் திலக் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி, அவரிடம் வெறும் 13,000 ரூபாய் பணமும், ஒரே ஒரு சவரன் தங்க நகையும் மட்டுமே உள்ளதாகவும், அவருக்கு என்று அசையும் அல்லது அசையா சொத்துக்கள் எதுவுமே இல்லை என்றும் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டார்.

எந்தப் பின்புலமும் இல்லாத ஒரு எளிய மனிதரை நாடாளுமன்ற மேலவைக்கு காங்கிரஸ் தலைமை அனுப்பி வைத்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது” என்று கூறிய அவர், இதற்காகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். கிறிஸ்டோபர் திலக் ஏற்கனவே கட்சிப் பணிகளிலும் மக்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டவர் என்றும், இனி வரும் காலங்களில் மக்கள் நலனுக்காக நாடாளுமன்றத்தில் அவரது குரல் ஒலிக்கும் என்றும் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version