Close Menu
    What's Hot

    வளமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா – இந்தோனேசியா பயணம்;  இருநாடுகளின் கலாச்சார பிணைப்பை புகழ்ந்த பிரதமர் மோடி

    திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து… போக்குவரத்துத் துறை அதிரடி!

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தெற்கு வங்கக் கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்பு! வரும் 29ல் சென்னைக்கு ‘ஆரஞ்சு’ அலர்ட்!
    தமிழ்நாடு

    தெற்கு வங்கக் கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்பு! வரும் 29ல் சென்னைக்கு ‘ஆரஞ்சு’ அலர்ட்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 25, 2025Updated:November 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMD
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (நவ. 25) வலுப் பெறக்கூடும் என்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை (நவ. 26) புயலாக உருவெடுக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    மலாக்கா ஜலசந்தி மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மலேஷியா மற்றும் அதையொட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா தெரிவித்துள்ளார்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (நவ. 25) வலுப் பெறக்கூடும் என்றும், மேலும் அதே திசையில் நகர்ந்து, நாளை (நவ. 26) தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக உருவெடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    தென் மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக 4 இடங்களில் அதிக கனமழையும், 15 இடங்களில் மிக கனமழையும், 76 இடங்களில் கனமழையும் பெய்துள்ளதாகவும் அமுதாக கூறியுள்ளார்.

    தென் மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (நவ. 25) இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் அமுதா கூறியுள்ளார்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் வரும் 29ல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமுதா தெரிவித்துள்ளார்.

    தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அக். 1 முதல் நவ. 24 வரையிலான காலகட்டத்தில், இயல்பை விட 5 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதாக தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரதீப் ரங்கநாதன் சொன்னால் அது அப்படியே நடக்கும் – நடிகை கீர்த்தி ஷெட்டி உறுதி !!!
    Next Article தகுதியான எந்த வாக்காளர் பெயரும் விடுபடாது!- மாநில தலைமை தேர்தல் அதிகாரி
    Editor TN Talks

    Related Posts

    வளமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா – இந்தோனேசியா பயணம்;  இருநாடுகளின் கலாச்சார பிணைப்பை புகழ்ந்த பிரதமர் மோடி

    July 7, 2026

    திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து… போக்குவரத்துத் துறை அதிரடி!

    July 7, 2026

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வளமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா – இந்தோனேசியா பயணம்;  இருநாடுகளின் கலாச்சார பிணைப்பை புகழ்ந்த பிரதமர் மோடி

    திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து… போக்குவரத்துத் துறை அதிரடி!

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்

    முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு – திமுகவினர் 2 பேர் கைது!

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.