Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»டிஎஸ்பி சுந்தரரேசனுக்கு பிடிவாரண்ட் – குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    தமிழ்நாடு

    டிஎஸ்பி சுந்தரரேசனுக்கு பிடிவாரண்ட் – குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025Updated:November 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dsp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குற்ற வழக்கில் ஆஜராகாத மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து வள்ளியூர் குற்றவியல் நடுவண் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2006ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதியில் மின்பேட்டரி காணாமல் போனது. இந்த சம்பவம் குறித்து செயல் அலுவலர் உச்சிமகாளி அளித்த புகாரின் அடிப்படையில், 6 பேர் மீது திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். ஒரு வழியாக, 2011 ஆம் ஆண்டு வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுந்தரேசன், குற்றவாளிகள் 6 பேரையும் கைது செய்து வள்ளியூர் குற்றவியல் நடுவண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

    இந்த வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை தொடர்பான விவரங்களை கேட்பதற்காக சுந்தரேசனை நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், தற்போது மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியாக உள்ள சுந்தரேசன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவ்வழக்கை நேற்று (நவ.20) விசாரணை செய்த நெல்லை நடுவண் நீதிமன்ற நீதிபதி டென்சிங், டிஎஸ்பி சுந்தரேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

    மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன், தனக்கு வழங்கப்பட்டிருந்த அரசு வாகனத்தை விஐபி பாதுகாப்பு பணிக்கு அனுப்பிவிட்டு, தனக்கு பழுதடைந்த வாகனத்தை உயரதிகாரிகள் கொடுத்துவிட்டதாக கூறி, கடந்த ஜூலை 17ஆம் தேதி காவல் நிலையத்திற்கு நடந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், தான் நேர்மையாக வேலை செய்வதாகவும், அதனால் தனது மேலதிகாரிகள் மூவர் தன்னை டார்ச்சர் செய்து வருவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியானது பேசுபொருளானது.

    அதனைத் தொடர்ந்து, அவரது குற்றச்சாட்டுகள் குறித்து தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் மயிலாடுதுறைக்கே நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு, அவரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்தார். அதன்பேரில், சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அதில் சுந்தரேசன்மீது எடுக்கப்பட்ட முந்தைய ஒழுங்கு நடவடிக்கைளை குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் பணியிடை நீக்க நடவடிக்கைக்கு பிறகு தற்போது மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுந்தரேசன், வழக்கு விசாரணைக்கு ஆஜராகதாதால் அவர்மீது தற்போது பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமருதநாயகம் திரைப்படம் சாத்தியம்தான்: கமல்ஹாசன் உறுதி
    Next Article சென்னைக்கு வரப் போகிறதா ஏர் டாக்சி? வெளியானது புதிய தகவல்!
    Editor TN Talks

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.