Close Menu
    What's Hot

    தமிழ்நாடு ஆளுநரின் பாதுகாப்பு அதிரடியாகக் குறைப்பு?

    பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, சீரமைப்பு பணி செய்ய வேண்டும்- முதல்வருக்கு டாஸ்மாக் தொழிற்சங்கம் கோரிக்கை

     மாஸ் கம்பேக்!. முதல் நாளிலேயே கோடிகளில் வசூல் அள்ளிய சூர்யாவின் ‘கருப்பு’!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»லஞ்சப் புகார்: BDO-விடம் விசாரணை; அலுவலக உதவியாளர் தற்கொலை!
    தமிழ்நாடு

    லஞ்சப் புகார்: BDO-விடம் விசாரணை; அலுவலக உதவியாளர் தற்கொலை!

    Editor web1By Editor web1May 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 05 16 at 10.56.25 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வீட்டுமனை ஒப்புதல் ரசீது வழங்க 7 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக திருவாருர் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையின் போது உதவியாளர் சுரேஷ்குமார் அலுவலக 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவாரூர் மாவட்டம், கீழகாவாதுகுடி பகுதியைச் சேர்ந்த பாரதிதாசன், தனது வீட்டுமனைக்கு அனுமதி பெறுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது அலுவலகத்தில் பணியாற்றி வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அவரது உதவியாளர் சுரேஷ்குமார் ஆகியோர் வீட்டுமனை ஒப்புதல் ரசீது வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினரிடம்  பாரதிதாசன் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய ரூ.7 ஆயிரத்தை பாரதிதாசனிடம் வழங்கியதை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம்  கொடுத்துள்ளார். அலுவலகப் பகுதியில் லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையிலான காவல்துறையினர்  திடீரென உள்ளே நுழைந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அவரது உதவியாளர் சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அப்போது திடீரென வட்டார வளர்ச்சி அலுவலரின் உதவியாளர் சுரேஷ்குமார் அலுவலகத்தின் மூன்றாவது மாடிக்கு அவசர அவசரமாக ஏறிச் சென்று தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் அங்கிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த சுரேஷ்குமாரை சக ஊழியர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சுரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். லஞ்சப் புகார் தொடர்பான விசாரணையின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் உதவியாளர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக அதிகார மோதல்!. இபிஎஸ் பெயர் அதிரடி நீக்கம்!. 
    Next Article மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த் மகள்
    Editor web1
    • Website

    Related Posts

    தமிழ்நாடு ஆளுநரின் பாதுகாப்பு அதிரடியாகக் குறைப்பு?

    May 16, 2026

    பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, சீரமைப்பு பணி செய்ய வேண்டும்- முதல்வருக்கு டாஸ்மாக் தொழிற்சங்கம் கோரிக்கை

    May 16, 2026

    மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது? – அமைச்சர் நிர்மல் குமார் பதில்

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாடு ஆளுநரின் பாதுகாப்பு அதிரடியாகக் குறைப்பு?

    பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, சீரமைப்பு பணி செய்ய வேண்டும்- முதல்வருக்கு டாஸ்மாக் தொழிற்சங்கம் கோரிக்கை

     மாஸ் கம்பேக்!. முதல் நாளிலேயே கோடிகளில் வசூல் அள்ளிய சூர்யாவின் ‘கருப்பு’!

    மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது? – அமைச்சர் நிர்மல் குமார் பதில்

    தேர்தல் தோல்வி!. 36 பேர் கொண்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    Trending Posts

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

     மாஸ் கம்பேக்!. முதல் நாளிலேயே கோடிகளில் வசூல் அள்ளிய சூர்யாவின் ‘கருப்பு’!

    May 16, 2026

    தேர்தல் தோல்வி!. 36 பேர் கொண்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    May 16, 2026

    பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, சீரமைப்பு பணி செய்ய வேண்டும்- முதல்வருக்கு டாஸ்மாக் தொழிற்சங்கம் கோரிக்கை

    May 16, 2026

    அதிமுக அதிகார மோதல்!. இபிஎஸ் பெயர் அதிரடி நீக்கம்!. 

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.