Close Menu
    What's Hot

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தேர்தல் முடிவுகளுக்கு முன் காவிரி ஆணையக் கூட்டமா?. தமிழக உரிமைகளை பறிக்கும் சதி!. சீமான் கடும் கண்டனம்!
    தமிழ்நாடு

    தேர்தல் முடிவுகளுக்கு முன் காவிரி ஆணையக் கூட்டமா?. தமிழக உரிமைகளை பறிக்கும் சதி!. சீமான் கடும் கண்டனம்!

    Editor web3By Editor web3April 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8057712 seeman1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும்! காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் 29.04.2026 அன்று நடைபெறும் என்று அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பதிவில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று, தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் கூட்டத்தை நடத்த காவிரி மேலாண்மை ஆணையம் முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

    காவிரி ஆற்றினை பங்குகொள்ளும் மூன்று முக்கிய மாநிலங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இன்னும் அமையாத நிர்வாகச் சூழலில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை அவசர அவசரமாக கூட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது? முழுமையான அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? மாநிலங்களின் உயர் அதிகாரிகள் வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கும் சூழலில் மண்ணின் உரிமைகளையும், மக்களின் உணர்வுகளையும் எப்படி உரத்து எழுப்புவார்கள்?

    நடைபெறவுள்ள கூட்டத்தில் மேகதாது அணை கட்டுமானம் குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ள நிலையில், இதர மூன்று மாநிலங்களில் அதிகாரம் படைத்த அரசுகள் இல்லாத நிலையில், கூட்டம் முழுக்க முழுக்க ஒருபக்க சார்பாக மாறி கர்நாடகாவுக்கு சாதகமாகிவிடாதா? யாருடைய உத்தரவின் பேரில் இத்தனை அவசரமாக காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்படுகிறது? யாருடைய நலனுக்காக இத்தனை அவசரமாக ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது? தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க, கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரசு அரசு மற்றும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கூட்டுச் சூழச்சியாகவே இக்கூட்டம் நடத்தப்படுவதாக தோன்றுகிறது.

    கச்சத்தீவு போன்று தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் இத்தகைய வரலாற்றுச் சதிகளை இனியும் அனுமதிக்க முடியாது. ஆகவே, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதி.மலை சித்ரா பவுர்ணமி கிரிவலம்!. உகந்த நேரம் என்ன?. 30 லட்சம் பக்தர்கள்!. பாதுகாப்பு தீவிரம்!
    Next Article தேர்தல் முடிவுக்கு முன்னரே காவிரி ஆணையக் கூட்டம் ஏன்?: சீமான் கேள்வி
    Editor web3
    • Website

    Related Posts

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    April 28, 2026

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    April 28, 2026

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    April 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா மறைவு – அன்புமணி இராமதாஸ் இரங்கல்

    “நம்பிக்கை இருந்தால் அற்புதங்கள் நடக்கும்” – ‘கருப்பு’ இசை விழாவில் சூர்யா

    Trending Posts

    மே 8-ல் ரிலீசாகிறதா ஜனநாயகன்? புதிய தகவலால் ரசிகர்கள் குழப்பம்..!

    April 28, 2026

    EVM மெஷின்கள் பாதுகாப்பாக இருக்கிறதா?. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த செல்வப்பெருந்தகை!. 

    April 28, 2026

    மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்!

    April 28, 2026

    புழுக்களாய் நெளிந்து கொண்டிருந்தவர்களை புலியாக மாற்றியவர் தேனிசை செல்லப்பா – சீமான் இரங்கல்

    April 28, 2026

    கடைசி படத்தில் ‘கமாண்டோ உடையில் அசத்திய ரோபோ சங்கர்!. குடும்பத்தினர் உருக்கம்!.

    April 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.