Close Menu
    What's Hot

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    மேகதாது அணைக்கு எதிராக ஜூலை 2 முதல் 3 நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆளுநர், இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!. எதற்கு தெரியுமா?
    தமிழ்நாடு

    ஆளுநர், இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!. எதற்கு தெரியுமா?

    Editor web3By Editor web3February 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Stalin thanked eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குறைகளை சுட்டிக்காட்டுவதில் கண்ணியத்தை கடைபிடித்ததற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 17ம் தேதி தொடங்கியது. அன்றைய நாளில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையையும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்தனர்.  இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது.

    இன்றைய நாளில் பதிலுரையை புறக்கணித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் அவைக்கு செல்லவில்லை. இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றினார். அப்போது, “கடந்த 5 ஆண்டுகாலத்தில் 5 நிதிநிலை அறிக்கைகள், இந்தாண்டு இடைக்கால பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவை சமர்பித்துள்ளோம். இந்த நேரத்தில் நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் இருவரும் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதிலுரை வழங்கியிருக்கிறார்கள். அதனை 2 மாதங்களில் மீண்டும் வந்து தொடர்வோம் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டைப் போல எனக்கும் இருக்கிறது.  எனக்கு தரப்பட்ட பொறுப்பை நான் சிறப்பாக செய்துள்ளேன்.

    மீண்டும் ஆட்சிக்கு வந்து நலத்திட்டங்களை தொடர்வோம். திமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என பிரித்து பார்க்காமல் அனைவருக்காகவும் செயல்பட்டுள்ளோம். சுயமரியாதை எள்ளளவு தீண்டப்பட்டாலும் அதை எதிர்க்கும் வரிசையில் முதல் ஆளாக நான் இருப்பேன். இந்த மிகப்பெரிய வாய்ப்பை தந்த தமிழ்நாடு மக்களுக்கும், என்னை தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதி மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், ஆளுநருக்கும், எனக்கும் தனிப்பட்ட வேறுபாடு கிடையாது. அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் அவை கண்ணியத்தை கடைபிடித்து குறைகளை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்த நாட்டில் உணவை வீணாக்குவது கிரிமினல் குற்றம்!. ரூ.80 லட்சம் அபராதம்!
    Next Article மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய வழக்கு!. ராமதாஸுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை!
    Editor web3
    • Website

    Related Posts

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    June 21, 2026

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    June 21, 2026

    மேகதாது அணைக்கு எதிராக ஜூலை 2 முதல் 3 நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    மேகதாது அணைக்கு எதிராக ஜூலை 2 முதல் 3 நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    “திமுக-அதிமுக ஒன்றானாலும் ஆச்சரியமில்லை”… பரபரப்பைக் கிளப்பும் சிபிஎம் சண்முகம்

    வாடி வாடி கைபடாத சிடி ; தவெக பெண் நிர்வாகியுடன் அமைச்சர் விஸ்வநாதன் குத்தாட்டம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.