Close Menu
    What's Hot

    அரசு பேருந்து கட்டணத்திலேயே 500 ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்!. முதலமைச்சரிடம் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

    காவிரி நீர்;  ஒன்றிய அரசு விவசாயிகளை ஏமாற்றுகிறது – அமைச்சர் ஷாஜஹான் குற்றச்சாட்டு!

    “இப்போது சிரிப்பார்கள்… நாளை என்னைத் தேடி வருவார்கள்!” – சீமான் சீரியஸ் பேச்சு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆபத்தை உணராமல் அணைக்கட்டில் விளையாடும் சிறுவர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
    தமிழ்நாடு

    ஆபத்தை உணராமல் அணைக்கட்டில் விளையாடும் சிறுவர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

    Editor TN TalksBy Editor TN TalksMay 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    river
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கோவை குற்றாலம் மற்றும் வெள்ளியங்கிரி மலைப்பகுதிகளுக்குப் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சித்திரைச்சாவடி, குனியமுத்தூர், புட்டுவிக்கி தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. வெள்ளலூர் தரைப்பாலத்தையும் மூழ்கடித்தபடி நொய்யல் ஆற்றின் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. நொய்யல் ஆற்றின் நீர் ராஜவாய்க்கால் மூலம் குளங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதால், சுற்றுவட்டாரக் குளங்களில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    கிருஷ்ணாபதி குளம், செல்வம்பதி குளம், குமாரசாமி குளம், சிங்காநல்லூர் குளம், இருகூர் குளம் ஆகியவை முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. பேரூர் பெரியகுளம், வாலாங்குளம், உக்கடம் நீலாம்பூர் குளம், சூலூர் பெரியகுளம், சூலூர் சின்னகுளம் என ஆறு குளங்கள் 90 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியுள்ளன.

    இதையும் படிக்க: செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது உயிரிழந்த கணவர்: ₹30 லட்சம் இழப்பீடு கோரி மனைவி மனு!!

    இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டு திறக்கப்பட்டதால் நீர்வரத்து அதிகமாக உள்ளது. பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால், மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் அங்கு மீன் பிடித்து, குளித்து விளையாடி வருகின்றனர். இதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

    மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித் துறையும் பல்வேறு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையிலும், அதைப் பொருட்படுத்தாமல் அணைக்கட்டுப் பகுதியில் சிறுவர்கள் விளையாடி வருகின்றனர். எனவே, உடனடியாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    Noiyal river River
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“அன்னை தமிழ் தான் அகில உலகின் மூத்த மொழி.. தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்!!
    Next Article மேட்டுராஜகாபட்டி காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா விமரிசை!
    Editor TN Talks

    Related Posts

    அரசு பேருந்து கட்டணத்திலேயே 500 ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்!. முதலமைச்சரிடம் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

    July 17, 2026

    காவிரி நீர்;  ஒன்றிய அரசு விவசாயிகளை ஏமாற்றுகிறது – அமைச்சர் ஷாஜஹான் குற்றச்சாட்டு!

    July 17, 2026

    “இப்போது சிரிப்பார்கள்… நாளை என்னைத் தேடி வருவார்கள்!” – சீமான் சீரியஸ் பேச்சு

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசு பேருந்து கட்டணத்திலேயே 500 ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்!. முதலமைச்சரிடம் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

    காவிரி நீர்;  ஒன்றிய அரசு விவசாயிகளை ஏமாற்றுகிறது – அமைச்சர் ஷாஜஹான் குற்றச்சாட்டு!

    “இப்போது சிரிப்பார்கள்… நாளை என்னைத் தேடி வருவார்கள்!” – சீமான் சீரியஸ் பேச்சு

    “2006, 2017… அரசியலில் நான் செய்த இரு பெருந்தவறுகள்…” – மனம் திறந்த வைகோ

    கீழடி அகழாய்வு அறிக்கை – இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையை நாட தமிழக தொல்லியல் துறை முடிவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.