Close Menu
    What's Hot

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    உலகக் கோப்பை திருவிழா!. கால்பந்து வரலாற்றை ஆண்ட ‘மகுடங்கள்’ யார் யார்?. சாதனை வரலாறு இதோ!

    `இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம்  – சீமான் அஞ்சலி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு!. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கட்-அவுட்களுக்கு செருப்பு மாலை!.
    தமிழ்நாடு

    பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு!. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கட்-அவுட்களுக்கு செருப்பு மாலை!.

    Editor web3By Editor web3March 19, 2026Updated:March 19, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Former AIADMK Ministers
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்​டம் – ஒழுங்கு சீர்​கேடு மற்​றும் பெண்களுக்கு எதி​ரான குற்​றங்​கள் அதி​கரித்​துள்​ள​தாக கூறி தேசிய ஜனநாயகக் கூட்​டணி கட்​சி​யினர் நேற்று முன்​தினம் மாநிலம் தழு​விய கண்டன ஆர்ப்​பாட்​டம் நடத்​தினர். இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், கண்ணியக்குறைவாகவும் இவர்களது பேச்சு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும், மகளிர் அமைப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.

    விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், அப்துல் கலாம் அவர்கள் ‘கனவு காணுங்கள்’ என்று சொன்னார். ஆனால் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே போய், ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள், நான் நிறைவேற்றுகிறேன்’ என்கிறார். எனக்கு ‘பிரபலமான நடிகை(நயன் தாரா) ஒருவர் வேண்டும்’ என்று கேட்டால் இவரால் அந்தக் கனவை நிறைவேற்ற முடியுமா? என்று பேசினார்.

    இந்த சர்ச்சை ஓய்வதற்குள், திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், சேலையும் கொடுத்துருக்காங்க… எப்படிரா பாவாடை இல்லாமல் கட்டுறது என பொம்பளைங்க எல்லாம் கேட்கிறாங்க என்று கூறியிருந்தார்.

    இதேபோல், கரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், உழவர் சந்தையில் உள்ள காய் காய்கறிகளை காட்டி அதுதான் கத்தரிக்காய். ஒல்லியாக இருக்கிறது பார் அதுதான் முருங்கை காய் என்கிறார்களாம். பக்கத்தில் இருக்கும் பெண்களை கைகாட்டி இந்த பிள்ளைகள் போல் குண்டா இருக்கிறது பார் அதுதான் பூசணிக்காய் என்று என்கிறார்கள் ” என்று பேசி உள்ளார். தேர்தல் நேரத்தில் இப்படி பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சர்கள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், இன்று காலை பொள்ளாச்சியின் முக்கிய சந்திப்பு சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ், இந்த மூன்று முன்னாள் அமைச்சர்களின் உருவப் படங்களுடன் கூடிய கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, அந்த மூன்று படங்களுக்கும் மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்திருந்தனர். மேலும் திண்டுக்கல் சீனிவாசன் கட் – அவுட்டிற்கு பாவாடை கட்டியுள்ளனர். காலை நேரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த இந்த கட்-அவுட்களுக்கு செருப்பு மாலை அணிவித்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலகின் மிகப்பெரிய LNG ஆலையை தாக்கிய ஈரான்!. இந்தியாவுக்கு பெரும் நெருக்கடி!
    Next Article தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு!. முக்கிய குற்றவாளி கைது !
    Editor web3
    • Website

    Related Posts

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    June 10, 2026

    உலகக் கோப்பை திருவிழா!. கால்பந்து வரலாற்றை ஆண்ட ‘மகுடங்கள்’ யார் யார்?. சாதனை வரலாறு இதோ!

    June 10, 2026

    `இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம்  – சீமான் அஞ்சலி

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    உலகக் கோப்பை திருவிழா!. கால்பந்து வரலாற்றை ஆண்ட ‘மகுடங்கள்’ யார் யார்?. சாதனை வரலாறு இதோ!

    `இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம்  – சீமான் அஞ்சலி

    ஐசிசி டெஸ்ட் தரவரிசை! முதலிடத்தை இழந்த ஜோ ரூட்!. NO.1 யார் தெரியுமா?. சுப்மன் கில் அசத்தல்!

    நிலுவையில் வழக்கு ; பரோல் வழங்க முடியுமா? – நீதிபதி அமர்வு விசாரணை தொடக்கம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.