Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு நன்மையே – வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கணிப்பு
    தமிழ்நாடு

    தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு நன்மையே – வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கணிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 19, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 ksr
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வழக்கறிஞரும் பாஜக நிர்வாகியுமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தொகுதி மறுவரையறை தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;-

    தொகுதி மறுசீரமைப்பு (Delimitation): தமிழ்நாடு இழக்கிறதா? உண்மை என்ன என்று மட்டும் பார்ப்போம்.

    Delimitation என்பது மக்கள்தொகை மற்றும் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையையும் எல்லைகளையும் மறுசீரமைக்கும் அரசியலமைப்புச் செயல்முறையாகும்.

    தற்போது விவாதிக்கப்படும் மாதிரியில், மக்களவை உறுப்பினர்கள் 543-இல் இருந்து 816-ஆக உயர்த்தப்படுகின்றனர்.

    அதாவது, 273 புதிய இடங்கள். சுமார் 50% உயர்வு.

    தமிழ்நாட்டிற்கு என்ன கிடைக்கிறது?

    தற்போது 39 மக்களவை உறுப்பினர்கள்.

    புதிய முன்மொழிவு 59 மக்களவை உறுப்பினர்கள்.

    அதாவது,தமிழ்நாட்டிற்கு 20 புதிய மக்களவை இடங்கள் கிடைக்கின்றன.

    தமிழ்நாட்டின் தேசிய பங்கு குறைகிறதா? இல்லை.

    தற்போது 39 / 543 = 7.18%

    புதிய முன்மொழிவு 59 / 816 = 7.23%

    முக்கியமாக, தமிழ்நாட்டின் தேசிய பிரதிநிதித்துவ விகிதம் குறைவதில்லை. மாறாக, 7.18% இருந்து 7.23% ஆக சிறிய அளவில் உயர்கிறது.

    தென்னிந்தியாவின் நிலை என்ன?

    தற்போது 129 மக்களவை உறுப்பினர்கள்.

    புதிய முன்மொழிவு 195 மக்களவை உறுப்பினர்கள்.

    அதாவது, 66 புதிய இடங்கள். தேசிய பங்கு 23.76% → 23.90%

    அதாவது, தென்னிந்தியாவின் அரசியல் விகிதாச்சாரமும் பெரும்பாலும் பாதுகாக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் முக்கிய நன்மைகள்

    • 20 புதிய மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அதிக அரசியல் குரல்
    • மாநில பிரச்சினைகளை அதிகமாக முன்வைக்கும் வாய்ப்பு
    • நாடாளுமன்ற விவாதங்களில் கூடுதல் பங்கேற்பு, நிலைக்குழுக்களில் அதிக பிரதிநிதித்துவம்
    • மத்திய அமைச்சரவையில் அதிக வாய்ப்பு
    • தமிழகத்திற்கு மத்திய திட்டங்கள் மற்றும் முதலீடுகளை வலியுறுத்தும் அரசியல் பலம்
    • ஒரு எம்.பி. பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு

    தென்னிந்தியாவிற்கு கிடைக்கும் நன்மைகள்

    • 66 கூடுதல் மக்களவை உறுப்பினர்கள்
    • தென் மாநிலங்களின் கூட்டுக் குரல் வலுப்படும்
    • தேசிய கொள்கைகளில் அதிக தாக்கம்
    • நாடாளுமன்றக் குழுக்களில் அதிக பிரதிநிதித்துவம்
    • மத்திய திட்டங்கள் மற்றும் முதலீடுகளை பெற அதிக அரசியல் செல்வாக்கு

    Delimitation என்பது இடங்களை உயர்த்துவது மட்டுமல்ல. அது அரசியல் வரைபடத்தையே மாற்றும்.

    • தொகுதி எல்லைகள் மாறும்
    • பழைய தொகுதிகள் மறையலாம்
    • புதிய தொகுதிகள் உருவாகலாம்
    • அரசியல் சமன்பாடுகள் மாறலாம்
    • புதிய தலைவர்கள் உருவாகலாம்
    • பழைய அரசியல் கோட்டைகள் பலவீனமடையலாம்

    எனவே,  “தமிழ்நாடு தனது அரசியல் பலத்தை இழந்துவிடும்” என்பது பொய்யான திசை திருப்பும் வாதம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    Advocate KS Radhakrishnan Constituency Delimitation delimitation K S Radhakrishnan KS Radhakrishnan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    Next Article திமுகவில் பெரும் தலைமை மாற்றம்.. உதயநிதியிடம் முழு அதிகாரம்? தேசிய அரசியலுக்கு நகரும் ஸ்டாலின்?
    Editor TN Talks

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.