வழக்கறிஞரும் பாஜக நிர்வாகியுமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தொகுதி மறுவரையறை தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;-
தொகுதி மறுசீரமைப்பு (Delimitation): தமிழ்நாடு இழக்கிறதா? உண்மை என்ன என்று மட்டும் பார்ப்போம்.
Delimitation என்பது மக்கள்தொகை மற்றும் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையையும் எல்லைகளையும் மறுசீரமைக்கும் அரசியலமைப்புச் செயல்முறையாகும்.
தற்போது விவாதிக்கப்படும் மாதிரியில், மக்களவை உறுப்பினர்கள் 543-இல் இருந்து 816-ஆக உயர்த்தப்படுகின்றனர்.
அதாவது, 273 புதிய இடங்கள். சுமார் 50% உயர்வு.
தமிழ்நாட்டிற்கு என்ன கிடைக்கிறது?
தற்போது 39 மக்களவை உறுப்பினர்கள்.
புதிய முன்மொழிவு 59 மக்களவை உறுப்பினர்கள்.
அதாவது,தமிழ்நாட்டிற்கு 20 புதிய மக்களவை இடங்கள் கிடைக்கின்றன.
தமிழ்நாட்டின் தேசிய பங்கு குறைகிறதா? இல்லை.
தற்போது 39 / 543 = 7.18%
புதிய முன்மொழிவு 59 / 816 = 7.23%
முக்கியமாக, தமிழ்நாட்டின் தேசிய பிரதிநிதித்துவ விகிதம் குறைவதில்லை. மாறாக, 7.18% இருந்து 7.23% ஆக சிறிய அளவில் உயர்கிறது.
தென்னிந்தியாவின் நிலை என்ன?
தற்போது 129 மக்களவை உறுப்பினர்கள்.
புதிய முன்மொழிவு 195 மக்களவை உறுப்பினர்கள்.
அதாவது, 66 புதிய இடங்கள். தேசிய பங்கு 23.76% → 23.90%
அதாவது, தென்னிந்தியாவின் அரசியல் விகிதாச்சாரமும் பெரும்பாலும் பாதுகாக்கப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் முக்கிய நன்மைகள்
- 20 புதிய மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அதிக அரசியல் குரல்
- மாநில பிரச்சினைகளை அதிகமாக முன்வைக்கும் வாய்ப்பு
- நாடாளுமன்ற விவாதங்களில் கூடுதல் பங்கேற்பு, நிலைக்குழுக்களில் அதிக பிரதிநிதித்துவம்
- மத்திய அமைச்சரவையில் அதிக வாய்ப்பு
- தமிழகத்திற்கு மத்திய திட்டங்கள் மற்றும் முதலீடுகளை வலியுறுத்தும் அரசியல் பலம்
- ஒரு எம்.பி. பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு
தென்னிந்தியாவிற்கு கிடைக்கும் நன்மைகள்
- 66 கூடுதல் மக்களவை உறுப்பினர்கள்
- தென் மாநிலங்களின் கூட்டுக் குரல் வலுப்படும்
- தேசிய கொள்கைகளில் அதிக தாக்கம்
- நாடாளுமன்றக் குழுக்களில் அதிக பிரதிநிதித்துவம்
- மத்திய திட்டங்கள் மற்றும் முதலீடுகளை பெற அதிக அரசியல் செல்வாக்கு
Delimitation என்பது இடங்களை உயர்த்துவது மட்டுமல்ல. அது அரசியல் வரைபடத்தையே மாற்றும்.
- தொகுதி எல்லைகள் மாறும்
- பழைய தொகுதிகள் மறையலாம்
- புதிய தொகுதிகள் உருவாகலாம்
- அரசியல் சமன்பாடுகள் மாறலாம்
- புதிய தலைவர்கள் உருவாகலாம்
- பழைய அரசியல் கோட்டைகள் பலவீனமடையலாம்
எனவே, “தமிழ்நாடு தனது அரசியல் பலத்தை இழந்துவிடும்” என்பது பொய்யான திசை திருப்பும் வாதம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
