Close Menu
    What's Hot

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»தமிழ்நாடு»ரூ.2 கோடி மோசடியில் ஈடுபட்ட துணை தாசில்தார்
    தமிழ்நாடு

    ரூ.2 கோடி மோசடியில் ஈடுபட்ட துணை தாசில்தார்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1629996394 hc
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூரில், 2 கோடி ரூபாய் கட்டிடத்தை அபகரிக்க உடந்தையாக, அதிகார துஷ்பிரயோகம் செய்த துணை தாசில்தாரர், சார் – பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க, பனியன் கம்பெனி பங்குதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி கிராமத்தில் வெங்கடாச்சலம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாடகைக்கு பெற்று, ஜெகன்நாதன் என்பவர் பனியன் கம்பெனி துவங்கினார். இந்த நிலத்தில் 2 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவிட்டு, கட்டிடங்கள், இயந்திரங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.

    வாடகை ஒப்பந்தம் புதுக்க முயற்சித்த போது, உடன்பாடு எட்டப்படாததால், கட்டுமானங்களுக்கு செலவிட்ட 2 கோடியே 3 லட்சம் ரூபாயை திருப்பித் தராமல், நில உரிமையாளர் வெங்கடாச்சலம், அவரது மனைவி துணை தாசில்தாரர் கீர்த்தி பிரபா, காவல் ஆய்வாளர் கணேசன் மிரட்டல் விடுத்ததாகக் கூறி, ஜெகன்நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், தொழிற்சாலை அமைந்திருந்த நிலத்தை மோசடியாக, விவசாய நிலம் என கூறி, துணை தாசில்தாரர் கீர்த்தி பிரபாவுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நல்லூர் சார் பதிவாளர் நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட துணை தாசில்தாரர் கீர்த்தி பிரபா, காவல் ஆய்வாளர் கணேசன், சார் – பதிவாளர் நாகராஜன் உள்பட ஐந்து அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு தான் முடிவெடுக்க முடியும். மூன்றாவது நபர் கேட்க முடியாது. அதிகாரிகள் குற்றத்தில் ஈடுபட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கையை எடுக்கலாம் என மனுதார்ருக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்
    Next Article ராட்வீலர் நாய்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்
    Editor TN Talks

    Related Posts

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    June 15, 2026

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    June 15, 2026

    காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    3 மாதம் நீடித்த ஈரான் – அமெரிக்க போர்!. அதிக இழப்புகளைச் சந்தித்தது யார்?

    காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.