Close Menu
    What's Hot

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»NDA கூட்டணியில் சேர தூதுவிட்ட EPS!. சசிகலா வைத்த டிமாண்ட்!. 
    தமிழ்நாடு

    NDA கூட்டணியில் சேர தூதுவிட்ட EPS!. சசிகலா வைத்த டிமாண்ட்!. 

    Editor web3By Editor web3February 9, 2026Updated:February 9, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps sasikala
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாநில அரசியல் நிலவரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஆளும் திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தங்களது கூட்டணிகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

    இந்த சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தமிழ்நாட்டில் தனது அரசியல் வலிமையை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் அடுத்த கட்ட அரசியல் முடிவு குறித்து அரசியல் வட்டாரங்களில் பரவலான பேச்சு நிலவியது. அதிமுக–பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைய வாய்ப்பு உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி, அரசியல் சூழலில் புதிய பரபரப்பை உருவாக்கின.

    இதுவரை அதிமுக தலைமையுடன் கருத்து வேறுபாடு காரணமாக தனித்த அரசியல் பயணத்தில் இருந்த அவர், மீண்டும் பழைய அணிக்குள் வர முனைந்துள்ளார் என கூறப்பட்டது. ஏனென்றால், டிடிவி தினகரனை என்.டி.ஏ. கூட்டணியில் சேர்த்துக்கொண்டதால் ஓபிஎஸ்ஸிற்கும் கதவுகள் திறக்கப்படும் என்றும் கூறப்பட்ட நிலையில், அதிமுகவில் ஓபிஎஸ்ஸை இணைக்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். இருப்பினும், கூட்டணியில் இழுக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இப்படி இருக்கையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா விரைவில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் அதிமுக- அமமுக கூடாரம் ஆடிப்போயுள்ளது. அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் சசிகலா. ஆனால், அந்த முயற்சிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். ஊடகங்களுக்கு மட்டும் முகம் காட்டி வரும் சசிகலா, தனது வீட்டில் இருந்தபடியே அதிமுகவில் பலரிடமும் ரகசியமாக பேசி வருவதாகக் கூறப்படுவது உண்டு. அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக ஸ்லீப்பர்செல்கள் இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

    எனவே, சசிகலா புதிய கட்சி தொடங்கினால் தமிழக அரசியலில் அது பெரும் திருப்புமுனையாக மாறும். அவரது புதிய கட்சியால் அதிமுகவுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பு அரசியல் கட்சிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போதே சசிகலா போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றதால் போட்டியிடவில்லை.

    சசிகலாவை இணைத்துக் கொண்டால் முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக கிடைக்கும். தென் மாவட்டங்களில் கூட்டணிக்கு வலு கிடைக்கும். சசிகலாவை கூட்டணி சேர்த்தால் அதிமுக வாக்குகள் பிரியாமல் ஆட்சிக்கு மீண்டும் வர வாய்ப்புள்ளது.

    இதெல்லாம் சேர்த்து கணக்கு போட்ட எடப்பாடி பழனிசாமி, என்.டி.ஏ. கூட்டணியில் சசிகலாவை சேர்க்க இசைவு கொடுத்துள்ளாராம். இருப்பினும், இந்த கூட்டணியில் சேர சசிகலாவும் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், எடப்பாடி பழனிசாமி, தனது நெருங்கிய தொழிலதிபர் ஒருவர் மூலம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. அப்போது தன்னுடன் இருக்கும் பள்ளிப்பட்டு நரசிம்மன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன் ஆகியோர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று சசிகலா கேட்டாராம். இதனை கேட்ட எடப்பாடி பழனிசாமி, முதலில் ஆதரவு கடிதம் கொடுத்தால் சீட்டு பற்றி பேசலாம் என்று கூறிவிட்டாராம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசமையலறையில் எண்ணெய் கறைகள் உள்ளதா?. ஈசியா சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்!.
    Next Article திருமண வாக்குறுதியை வைத்து நீண்டநாள் உடலுறவில் ஈடுபடுவதை வன்கொடுமையாக கருதமுடியாது!. நீதிபதி அதிரடி!
    Editor web3
    • Website

    Related Posts

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    June 17, 2026

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    June 17, 2026

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.