​கா​விரி-வைகை குண்​டாறு திட்​டத்தை விரைந்து நிறைவேற்​றக் கோரி 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக பங்கேற்றனர்.

காவிரி-வைகை குண்​டாறு திட்​டத்​துக்கு போதிய நிதி ஒதுக்​கி, திட்​டத்தை நிறைவேற்​றக் கோரி அகில இந்​திய விவசாயிகள், விவ​சா​யத் தொழிலா​ளர்​கள் சங்​கம் சார்​பில் சென்​னை​யில் நேற்று பேரணி நடை​பெற்​றது.

எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் தொடங்​கிய பேரணி, தெற்கு கூவம் சாலை வழி​யாக லாங்க்ஸ் கார்​டன் சாலை​யில் முடிவடைந்​தது. இதில் 300-க்​கும் மேற்​பட்ட விவசாயிகள், விவ​சா​யத் தொழிலா​ளர்​கள் பங்​கேற்​றனர்.

இந்​த பிரச்​சினைக்கு உடனடி​யாக தீர்​வு​காண வேண்​டும். அதே​போல, மந்​த​மாக நடந்து வரும் காவிரி-வைகை குண்​டாறு திட்​டத்​துக்கு போதிய நிதி ஒதுக்​கீடு செய்​து, அத்​திட்​டத்தை நிறைவேற்ற வேண்​டும். விவ​சாயப் பொருட்​களை அரசே மொத்த கொள்​முதல் செய்​து, விநி​யோகம் செய்​ய வேண்​டும்.

குறைந்​த​பட்ட ஆதார விலையை சட்​ட​மாக்க வேண்​டும். விவ​சா​யிகளை பாதிக்​கும் மின் மசோ​தா​வைத் திரும்​பப்​ பெற வேண்​டும். இந்​த கோரிக்​கைகள் தொடர்​பாக கிராமப் பஞ்​சா​யத்​துகளி​லும், வட்​டாரத் தலைநகர்​களி​லும் நடத்​தப்​பட்ட ஆர்ப்​பாட்​டங்​கள் அரசாங்​கத்​தின் காதுகளுக்கு எட்​டாத​தால், மாநிலத் தலைநகரில் பேரணியை முன்​னெடுத்​துள்​ளோம்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version