Close Menu
    What's Hot

    டெல்லி கேபிடல்ஸ் அணியில் யுவராஜ் சிங்!. கங்குலி கூட்டணியுடன் அதிரடி மாற்றங்கள்!.

    குடியரசுத் தலைவருக்கு 68வது பிறந்தநாள்..!! துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    வெப்பம் குறையும்; ஈரப்பதம் நிலவும் – சென்னை மக்களுக்கு ஜில்லுனு ஒரு செய்தி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடரும்… பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் ரயில் மறியல்…
    தமிழ்நாடு

    மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடரும்… பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் ரயில் மறியல்…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 19, 2025Updated:August 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி மீனவர்கள் ரயில் மறியலில் ஈடுபடவுள்ளனர்.

    61 நாட்கள் தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 55-க்கும் மேற்பட்ட மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுபடகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

    அவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படையின் பிரச்சனை இன்றி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் தங்கச்சி மடத்தில் இன்று அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் மிகப்பெரிய அளவில் ரயில் மறியல் போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளனர். மாலை 3 மணியளவில் தங்கச்சிமடம் ராஜா நகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீனவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக நேற்று மாலை ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ ராஜமனோகரன் தலைமையில் மீனவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்ததால், திட்டமிட்டபடி இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேப் போல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தை கூட்டமும் தோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசூடுபிடிக்கும் துணை குடியரசுத் தலைவர் போட்டி… ’இந்தியா’ கூட்டணி வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்…
    Next Article வெள்ளக்காடான மும்பை… வரலாறு காணாத கனமழையால் மக்கள் அவதி…
    Editor TN Talks

    Related Posts

    டெல்லி கேபிடல்ஸ் அணியில் யுவராஜ் சிங்!. கங்குலி கூட்டணியுடன் அதிரடி மாற்றங்கள்!.

    June 20, 2026

    குடியரசுத் தலைவருக்கு 68வது பிறந்தநாள்..!! துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    June 20, 2026

    வெப்பம் குறையும்; ஈரப்பதம் நிலவும் – சென்னை மக்களுக்கு ஜில்லுனு ஒரு செய்தி

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லி கேபிடல்ஸ் அணியில் யுவராஜ் சிங்!. கங்குலி கூட்டணியுடன் அதிரடி மாற்றங்கள்!.

    குடியரசுத் தலைவருக்கு 68வது பிறந்தநாள்..!! துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    வெப்பம் குறையும்; ஈரப்பதம் நிலவும் – சென்னை மக்களுக்கு ஜில்லுனு ஒரு செய்தி

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் இன்று..! தலைவர்கள் வாழ்த்து..!

    மழைக்கால சோதனை.. சேறும் சகதியுமாக மாறிய ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்..!! அல்லல்படும் மக்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.