கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைந்து நகைப்பிரியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,400 வரை உயர்ந்திருந்த நிலையில், இன்று அதன் பாதியாகிய ரூ,1,200 சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சூழலால் இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.1.15 லட்சம் என்ற வரம்பிற்கு கீழ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,360-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,210-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், வெள்ளி விலையில் இன்று எவ்வித மாற்றமுமின்றி நிலையாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,75,000-க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை பாதியாகக் குறைந்துள்ளதால் நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
