ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை அதிகரித்து வரலாற்றில் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெள்ளி விலையும் வெகுவாக உயர்ந்து வருகிறது. அதன்படி, இன்று (டிச. 12) காலை தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சமாக ஒரு கிராமுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,250-க்கும், சவரன் ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில், மாலையில் மீண்டும் அதிகரித்த தங்கம் விலை, நகைப் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ஒரு சவரன் ரூ.98,960க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,370க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காலையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.1,600 உயர்ந்த நிலையில் மாலை ரூ.960 உயர்ந்தது. அதேபோன்று, வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.216க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 அதிகரித்து ஒரு கிலோ ரூ.2.16 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
