சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து, ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதேவேளையில், வெள்ளி விலை கணிசமாகக் குறைந்து பொதுமக்களுக்குச் சிறு ஆறுதலை அளித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்களின் காரணமாக, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,11,600 என்ற வரலாறு காணாத விலையை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஏறுமுகமாக இருக்கும் தங்கத்தின் விலை, நகை வாங்குவோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலை உயர்ந்தாலும், வெள்ளியின் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version