பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் இன்று (ஜன.17) ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசல் வழியாக அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000-க்கும் மேற்பட்ட காளைகள், காளையர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கண்டு ரசித்து வருகிறார். தொடர்ந்து 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிக காளைகளை பிடித்து வெற்றிபெறும் மாடுபிடி வீரருக்கு கால்நடை பராமரிப்பு துறையில் அரசு பணி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் அலங்காநல்லூரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் மற்றும் உயர்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

முன்னதாக, பொதுமக்கள் மத்தியில் பேசிய முதல்வர்,  அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். நம்முடைய தமிழ் மண்ணிற்கு பெருமைக்குரிய விஷயமாக ஜல்லிக்கட்டு திகழ்கிறது என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version