Close Menu
    What's Hot

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? இன்று நடைபெறுகிறது இறுதிப் போட்டி..!

    கிருஷ்ணகிரி : 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை..! பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பக்ரீத் பண்டிகை; மாடுகள் வெட்டுவதில் தடை? – உயர்நீதிமன்றம் உத்தரவு
    தமிழ்நாடு

    பக்ரீத் பண்டிகை; மாடுகள் வெட்டுவதில் தடை? – உயர்நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksMay 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 cow
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பிற பகுதிகளில் மாடுகளை வெட்ட தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கோவை மாவட்டம் செல்வபுரத்தைச் சேர்ந்த சூர்யபிரசாந்த் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவை செல்வபுரம் பகுதியில் மாடுகள் வெட்டுவதற்காக  தகர கொட்டகைகல் அமைக்கப்பட்டிருந்தன; இதுதொடர்பாக புகார் அளித்ததை தொடர்ந்து, செல்வபுரம் போலீசார் அந்த இடத்துக்கு வந்து 7 மாடுகளை மீட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

    இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகைக்காக துடியலூர் சந்தை, ரத்தினபுரி மசூதி, உக்கடம், செல்வபுரம், கள்ளமேடு, குனியமுத்தூர், கோட்டைமேடு, போதனூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பொது இடங்களில் மாடுகள் வெட்டப்பட உள்ளதாகவும்,

    அதைத்தடுத்து மாடுகளை மீட்டு, கோசலைகளுக்கு அனுப்பிவைக்கும்படி செல்வபுரம் போலீசாருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால்,

    புகாரை பரிசீலித்து பொது இடங்களில் மாடுகள் வெட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்ககும்படி உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் அமர்வு, கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, பொது இடங்களில் மாடுகளை வெட்டுவதற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது;

    1976ஆம் ஆண்டு பசு வதையை தடை செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது; நகர்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மாடுகளை வெட்ட வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது என்பதால், அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பிற பகுதிகளில் மாடுகளை வெட்டக் கூடாது என்றும்,

    பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படவில்லை என்பதை தமிழக அரசின் தலைமை செயலாளரும், டிஜிபி-யும் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தது ஜனநாயகப் படுகொலை – அன்புமணி கண்டனம்
    Next Article தமிழ்நாட்டுக்காக 4 கோரிக்கைகள் – பிரதமரிடம் முதலமைச்சர் முன்வைத்தது என்னென்ன?
    Editor TN Talks

    Related Posts

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    May 31, 2026

    கிருஷ்ணகிரி : 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை..! பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு..!

    May 31, 2026

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? இன்று நடைபெறுகிறது இறுதிப் போட்டி..!

    கிருஷ்ணகிரி : 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை..! பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு..!

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    Trending Posts

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    May 31, 2026

    ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? இன்று நடைபெறுகிறது இறுதிப் போட்டி..!

    May 31, 2026

    கிருஷ்ணகிரி : 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை..! பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு..!

    May 31, 2026

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.