Close Menu
    What's Hot

    MAGICAL MAY..! நடிகை திரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்..!

    திடீர் வாயுக்கசிவு..!! பொதுமக்களுக்கு மூச்சு திணறல்..!! சென்னையில் பரபரப்பு..!!

    ஜோசப் விஜய் வாய்ச்சவடால் ஆட்சி;  தத்தக்கா பித்தக்கா தவெக அரசு – கரித்து கொட்டும் ஹெச்.ராஜா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சட்டவிரோத குவாரி நடத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு
    தமிழ்நாடு

    சட்டவிரோத குவாரி நடத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025Updated:November 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    quarry
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டவிரோத குவாரிகள் நடத்துவோர் மீது அபராதம் விதிப்பதுடன் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரை சேர்ந்த காசிராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ‘தமிழகத்தில் சுமார் 1700 கல் குவாரிகளுக்கு அரசு உரிமம் வழங்கியுள்ளது. குவாரி உரிமம் பெறுபவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் பல மடங்கு அதிகமாக கற்களை வெட்டுகின்றனர். பலர் உரிமம் காலாவதியான பிறகும் சட்டவிரோதமாக கற்களை வெட்டி விற்பனை செய்கின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் பல்வேறு சட்டவிரோத கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. சிலர் அரசு புறம்போக்கு நிலங்களை பட்டா நிலமாக போலியாக ஆவணங்கள் தயாரித்து அந்த இடங்களில் கல்குவாரிகள் நடத்தி வருகின்றனர். இதனால் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது.

    புதுக்கோட்டையில் எழில் நகரைச் சேர்ந்த முருகேசனும், கரூர் ஆண்டாங்கோயிலில் ரங்கசாமி என்பவரும் சட்டவிரோத குவாரி நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுவாக சட்டவிரோதமாக குவாரி நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க மனு அளித்தால் அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    சிலருக்கு சட்டவிரோத குவாரி நடத்தியதற்காக பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை வசூல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

    அதே நேரத்தில் சட்டவிரோதமாக குவாரிகள் நடத்துவோருக்கு அபராதம் மட்டும் விதிக்காமல் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சட்டவிரோத குவாரி நடத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார். அரசு தரப்பில், ‘குளத்தூர் வத்தனாக்குறிச்சி கிராமத்தில் முருகேசன் என்பவர் உரிமம் வழங்கப்படாத நிலங்களில் சுமார் 9 ஆயிரம் கனமீட்டர் கனிம வளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்ததற்காக அவருக்கு கடந்த 2023-ல் ரூ.3.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

    அவர் இதுவரை அபராத தொகையை கட்டாததால் வருவாய் துறை சட்டப்படி அபராதத் தொகையை வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், ‘சட்டவிரோத கனிம திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிப்பது மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பது குறித்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் ஜெயந்த் வழக்கில் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article10 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு
    Next Article உலகின் மிக உயரமான செயல்பாட்டு போர் விமான தளத்தை இயக்கி இந்தியா சாதனை!!!
    Editor TN Talks

    Related Posts

    திடீர் வாயுக்கசிவு..!! பொதுமக்களுக்கு மூச்சு திணறல்..!! சென்னையில் பரபரப்பு..!!

    June 2, 2026

    ஜோசப் விஜய் வாய்ச்சவடால் ஆட்சி;  தத்தக்கா பித்தக்கா தவெக அரசு – கரித்து கொட்டும் ஹெச்.ராஜா

    June 2, 2026

    வாழ்த்து மழையில் நனையும் இசைமழை

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    MAGICAL MAY..! நடிகை திரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்..!

    திடீர் வாயுக்கசிவு..!! பொதுமக்களுக்கு மூச்சு திணறல்..!! சென்னையில் பரபரப்பு..!!

    ஜோசப் விஜய் வாய்ச்சவடால் ஆட்சி;  தத்தக்கா பித்தக்கா தவெக அரசு – கரித்து கொட்டும் ஹெச்.ராஜா

    பாஜக தலைவர் நிதின் நபினுடன் அண்ணாமலை முக்கிய மீட்டிங்..!! எதிர்பார்ப்பு உச்சம்..!!

    வாழ்த்து மழையில் நனையும் இசைமழை

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.