தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையிலிருந்து சென்னை வந்தடைந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தான் இந்தத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து நிலவும் பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர் கூறுகையில், “நான் எந்தத் தொகுதியிலும் போட்டியிடப் போவதில்லை என்பதை ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக கட்சியின் உயர்மட்டக் குழுவிடம் தெரிவித்துவிட்டேன். எனக்கு சீட் வழங்கப்படவில்லை என்பதை விட, நானே தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்பதே உண்மை. பத்திரிகைகளில் இது பேசுபொருளாக உள்ளதால் இதைத் தெளிவுபடுத்துகிறேன். நான் போட்டியிடுவதாக இருந்தால் எந்தத் தொகுதியிலும் நின்றிருக்கலாம், ஆனால் தற்போதைய சூழலில் களப்பணியாற்றவே விரும்புகிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடியின் தமிழக வருகை மற்றும் அடுத்தக்கட்டப் பயணங்கள் குறித்து விளக்கினார். பாண்டிச்சேரி பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை வந்துள்ள பிரதமர், இன்று கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளதாகவும், அதன் பின்பு கொச்சி சென்று என்.டி.ஏ (NDA) கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். தன்னுடைய விருப்பத்தை மதித்து, கூட்டணி வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்யும் வாய்ப்பை வழங்கிய பாஜக தலைமைக்குத் தனது நன்றியினை  தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version