Close Menu
    What's Hot

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    ஓட்டல்களுக்கு இட்லி விற்பனை..!! எழுந்த பரபரப்பு புகார்..!! அம்மா உணவக ஊழியர்கள் 2 பேர் டிஸ்மிஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கேரளாவிற்கு அடிபணிகிறதா பொதுப்பணித்துறை?… முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு…
    தமிழ்நாடு

    கேரளாவிற்கு அடிபணிகிறதா பொதுப்பணித்துறை?… முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை.152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை நீர் திறக்கப்படுவது வழக்கம்.

    அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் கடந்த சில மாதங்களாக அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 110 அடி வரை குறைந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து. அதனால் அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களில் 16 அடி வரை உயர்ந்து, தற்போது அணையின் நீர்மட்டம் 130 அடியை எட்டி உள்ளது.

    2 9

    மேலும் அணைக்கு நீர்வரத்து இன்று (31.05.2025) காலை நிலவரப்படி வினாடிக்கு 6,125கன அடியாகவும், நீர் இருப்பு 4664.75 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மீண்டும் 142 அடி வரை உயர்த்தப்படும் என விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். அணையில் இருந்து தேனி மாவட்ட குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வந்த நிலையில், நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நேற்று முன்தினம் (29.05.2025) வினாடிக்கு 1,350 கனஅடி நீர் தமிழகப் பகுதிக்கு வெளியேற்றப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1,400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை முல்லை பெரியாற்றின் கரையோரம் வசிக்கும் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு ஆட்சியில் எந்த நேரத்திலும் அதிக அளவு நீர் திறக்கப்படலாம் என்பதால், யாரும் பெரியாற்றின் பக்கம் செல்லக்கூடாது என எச்சரிக்கை பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு வருகிறது.

    3 10

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 130 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரளா தொடர்ந்து போராடி வருகிறது. மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் மனுதாக்கல் செய்வதுடன், கேரளாவில் உள்ள பல்வேறு அமைப்புகளும் அணை பலவீனமாக உள்ளது, அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கேரளாவின் அழுத்தத்திற்கு பயந்து, தமிழக பொதுப்பணித்துறையினர் தேவைக்கு அதிகமான கூடுதல் நீரை தமிழக பகுதிக்கு திறந்து விட்டு கேரளாவின் கோரிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்களோ என்ற சந்தேகம் வலுவாக எழுந்து வருகிறது. பல்வேறு விவசாய அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் கம்பத்தில் உள்ள முல்லைப் பெரியாறு பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமானை வேட்டையாடி தலைமறைவான நபர்… 4 மாதங்களுக்கு பிறகு கைது…
    Next Article நெல்லை மனோன்மணியம் பல்கலை. விவகாரம்… வினாத்தாள் கசிந்தது தொடர்பாக வழக்குப் பதிவு…
    Editor TN Talks

    Related Posts

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    June 19, 2026

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    June 19, 2026

    ஓட்டல்களுக்கு இட்லி விற்பனை..!! எழுந்த பரபரப்பு புகார்..!! அம்மா உணவக ஊழியர்கள் 2 பேர் டிஸ்மிஸ்..!!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    ஓட்டல்களுக்கு இட்லி விற்பனை..!! எழுந்த பரபரப்பு புகார்..!! அம்மா உணவக ஊழியர்கள் 2 பேர் டிஸ்மிஸ்..!!

    அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் நீடிக்கும் அன்பு..!! மு.க ஸ்டாலினுக்கு ராகுல் நன்றி..!!

    ராகுல் காந்தி பிறந்தநாள்!. 1,000 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கிய காங்கிரஸ் கட்சியினர்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.