Close Menu
    What's Hot

    வெறும் 28% தான் இருக்கா?. இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட நீர் எச்சரிக்கை!.

    மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே ‘வில்லன்’..!! வைகோ ஆவேசம்..!!

    நேரலை துண்டிப்பு விவகாரம்..!! இது ஜனநாயகத்தை இருளில் தள்ளும் செயல்..!! சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழ்நாட்டை உலுக்கிய கும்மிடிப்பூண்டி வழக்கு..!! பீகார் இளைஞனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!!
    தமிழ்நாடு

    தமிழ்நாட்டை உலுக்கிய கும்மிடிப்பூண்டி வழக்கு..!! பீகார் இளைஞனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!!

    editor5By editor5June 16, 2026Updated:June 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 23 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலான தொழிலாளர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதனால் அருகிலுள்ள புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடனும், தனியாகவும் வாடகை வீடுகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை ஒருவர் திடீரென மாயமானார். குழந்தையை தேடிய பெற்றோர் எங்கும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அருகே உள்ள முட்புதரில் இயற்கை உபாதைக்குச் சென்ற பெண்கள் சிலர் குழந்தை ரத்தக்காயங்களுடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை முதலில் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

    விசாரணையில், குழந்தையின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது பிபின் மஞ்சி என்பவர் பிஸ்கெட் வாங்கித் தருவதாகக் கூறி குழந்தையை அழைத்துச் சென்றதாக தெரியவந்தது. முட்புதரில் வைத்து அவர் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், ஒரே அறையில் தங்கியிருந்த நான்கு வடமாநில இளைஞர்கள் சேர்ந்தே இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டினர். அனைவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதனிடையே சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. போக்சோ சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிபின் மஞ்சியை புழல் சிறையில் அடைத்து, வரும் 29ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டார். மேலும் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.8 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

    இச்சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். “குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தை இருவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். வழக்கு தொடர்பான கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. சரிபார்க்கப்படாத மற்றும் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்” என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்பேட்டைப் பகுதிகளில் வாழும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

    Breaking News Tamil Child Safety Court Remand Crime News Tamil Gummidipoondi Case Gummidipoondi News Tamil Nadu Crime News Women Safety
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக எம்.எல்.ஏ வெற்றிக்கு எதிராக வழக்கு..! ஊழல் செய்து வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு..!
    Next Article குலுங்கிய இந்தோனேசியா..!! நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு..!!
    editor5

    Related Posts

    மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே ‘வில்லன்’..!! வைகோ ஆவேசம்..!!

    June 20, 2026

    நேரலை துண்டிப்பு விவகாரம்..!! இது ஜனநாயகத்தை இருளில் தள்ளும் செயல்..!! சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!

    June 20, 2026

    மூதாட்டிக்கு கூட பாதுகாப்பில்லை.. இதுதான் ஆட்சி மாற்றமா..?? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெறும் 28% தான் இருக்கா?. இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட நீர் எச்சரிக்கை!.

    மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே ‘வில்லன்’..!! வைகோ ஆவேசம்..!!

    நேரலை துண்டிப்பு விவகாரம்..!! இது ஜனநாயகத்தை இருளில் தள்ளும் செயல்..!! சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!

    கிரிக்கெட்டில் ஹெல்மெட் வந்தது எப்படி?. ஒரு சுவாரசிய பின்னணி!.

    மூதாட்டிக்கு கூட பாதுகாப்பில்லை.. இதுதான் ஆட்சி மாற்றமா..?? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.