மதுரையில் ஓடி கொண்டிருக்கும் அரசு பேருந்தின் டயர் வெடித்து கழன்று தனியாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் 55 பேர் பயணித்துள்ளனர். கடட்டபுளி நகர் பகுதிக்கு அருகே மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்தின் பின்பக்க டயர் வெடித்தது. அப்போது ஒட்டுநர் பிரேக் போட்டதால் பேருந்தின் பின்பக்க டயர் துண்டாகி தனியாக ஓடி விழுந்தது.

பின்னர் நிலைத் தடுமாறிய பேருந்து சாலையின் இடதுபுறம் சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து பேருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version