Close Menu
    What's Hot

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!

    மிகப்பெரிய பொருளாதார புயல் வீசும்; சாமானியர்களுக்கே பாதிப்பு!. ராகுல் காந்தி எச்சரிக்கை!

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மதுரையில் பயங்கரம்… போலீஸ் நிலையத்தில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை
    தமிழ்நாடு

    மதுரையில் பயங்கரம்… போலீஸ் நிலையத்தில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    suiii
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரையில் பட்டதாரி இளைஞர் புறக்காவல் நிலையத்துக்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் அருகே சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் புறக்காவல் நிலையம் செயல்படுகிறது. இங்கு சுழற்சி முறையில் ஓரிரு போலீஸார் பணியில் இருப்பது வழக்கம். இந்நிலையில், அங்கு போலீஸார் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது.  மாலை அவ்வழியாக ஆட்டோ ஓட்டிச் சென்ற ஒருவர் புறக்காவல் நிலையம் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு, திறந்து கிடந்த புறக்காவல் நிலையத்துக்குள் சென்றுள்ளார்.

    பின்னர், ஏற்கெனவே தயாராக எடுத்துச் சென்ற கேனில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். அவரது உடல் முழுவதும் தீ பரவி, புறக்காவல் நிலையத்துக்கு உள்ளேயே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரது அலறல் சப்தத்தைக் கேட்டு பதறிப்போன வாகன ஓட்டிகளும், பேருந்துக்காக காத்திருந்த பயணிகளும் அங்கு சென்று, புறக்காவல் நிலையத்தில் இருந்த தண்ணீரை அவர் மீது ஊற்றி, தீயை அணைத்த னர். எனினும், பலத்த தீக்காய மடைந்திருந்த அவர், அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலில் தீ வைக்கும்போது கோஷம் எழுப்பியது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக தல்லாகுளம் போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் மதுரை நரிமேட்டைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் பூர்ணசந்திரன் (40) என்று தெரியவந்தது. எம்பிஏ பட்டதாரியான இவர், மருந்து விற்பனைப் பிரதிநிதியாக இருந்தார். மேலும், பகுதி நேரமாக பழங்கள் விற்றுள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “உயிரிழந்தவர், இந்து அமைப்பு ஒன்றில் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி அண்மையில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்தக் கோரிக்கையை வலியுறுத்தியே அவர் தீக்குளித்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து வருகிறோம். மேலும், அவரது செல்போனையும் ஆய்வு செய்கிறோம்” என்றனர்.

    பூர்ணசந்திரன் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது செல்போனில் பேசிய ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்த ஆடியோவில் ‘‘திருப்பரங்குன்றம் முருகனின் முதல் படைவீடு. அங்கு தீபம் ஏற்றுவது மதுரை மக்களுக்குத்தான் பெருமை. உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டும், அதை நிறைவேற்ற அரசு மறுக்கிறது. அரசு ஏன் இதைத் தடுக்க நினைக்கிறது? முஸ்லிம்கள் யாரும் தீபம் ஏற்றுவதை தடுக்கவில்லை. என்னுடன் ஏராளமான முஸ்லிம் நண்பர்கள் படித்தனர்.

    மதுரை மக்களிடையே கலவரத்தைத் தூண்ட நினைக்கின்றனர். மன்னித்து விடுங்கள், ஓர் இந்துவாக தீபம் ஏற்றாமல் இருப்பது மன வருத்தத்தை அளிக்கிறது. கடவுள் இல்லை என்று கூறும் பெரியார் சிலை முன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்.

    2026-ம் ஆண்டிலாவது தீபம் ஏற்ற வேண்டும். எனக்கு இனியா, சிவனேஷ் என்ற குழந்தைகள் உள்ளனர். மனைவி, குழந்தைகள் என்னை மன்னித்து விடுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடி20 தொடரை வெல்லுமா இந்திய அணி? இன்று கடைசிப் போட்டி
    Next Article தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிச. 19) வெளியீடு!
    Editor TN Talks

    Related Posts

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!

    May 19, 2026

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    May 19, 2026

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!

    மிகப்பெரிய பொருளாதார புயல் வீசும்; சாமானியர்களுக்கே பாதிப்பு!. ராகுல் காந்தி எச்சரிக்கை!

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.