Close Menu
    What's Hot

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    காமன்வெல்த் போட்டி;  தங்கமே இலக்கு… அரையிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி சவுத்ரி உறுதி!

    மாணவர்களுக்கு ஆபத்தா? மோடி அரசு விட்டு வைக்காது- அமித்ஷா உறுதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆற்காட்டில் பட்டப்பகலில் பயங்கரம்… தந்தை-மகனை விரட்டிச் சென்று சரமாரி வெட்டு!
    தமிழ்நாடு

    ஆற்காட்டில் பட்டப்பகலில் பயங்கரம்… தந்தை-மகனை விரட்டிச் சென்று சரமாரி வெட்டு!

    Editor web2By Editor web2July 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 29 17h18m05s760
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் தந்தை மற்றும் மகனை கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த நாகமுத்து மற்றும் அவரது மகன் மணி ஆகியோர் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் (Second Sales) கடை நடத்தி வருகின்றனர். இன்று வழக்கம்போல் இருவரும் கடையில் இருந்தபோது, மணி மற்றும் கார்த்தி என்பவருக்கிடையே இருந்து வந்த முன்விரோதம் தொடர்பாக கார்த்தி நேரடியாக கடைக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த கார்த்தி, நாகமுத்து மற்றும் மணியை சரமாரியாக வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர். தாக்குதலில் காயமடைந்த மணி உயிர் தப்ப ஓடியபோதும், அவரை விரட்டிச் சென்ற கார்த்தி சாலையிலேயே மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    vlcsnap 2026 07 29 17h17m26s060

    ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மணியை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தாக்குதலில் காயமடைந்த நாகமுத்துவும் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சம்பவம் குறித்து ஆற்காடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் சினிமா காட்சியை ஒத்த வகையில் ஒருவரை விரட்டிச் சென்று வெட்டும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Arcot cctv KnifeAttack ranipet
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதூத்துக்குடி; தவெக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு… எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகார்
    Next Article பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணியா?… வேண்டவே வேண்டாம்… எஸ்டிபிஐ வலியுறுத்துவது ஏன்?
    Editor web2
    • Website

    Related Posts

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    July 29, 2026

    காமன்வெல்த் போட்டி;  தங்கமே இலக்கு… அரையிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி சவுத்ரி உறுதி!

    July 29, 2026

    மாணவர்களுக்கு ஆபத்தா? மோடி அரசு விட்டு வைக்காது- அமித்ஷா உறுதி

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    காமன்வெல்த் போட்டி;  தங்கமே இலக்கு… அரையிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி சவுத்ரி உறுதி!

    மாணவர்களுக்கு ஆபத்தா? மோடி அரசு விட்டு வைக்காது- அமித்ஷா உறுதி

    பழனி மட நில வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

    நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பான வழக்கு… மத்திய அரசு, பல்கலை. மானியக் குழு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.