Close Menu
    What's Hot

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பழைய சோறை தின​மும் சாப்பிடுவதால் புற்றுநோய், நீரிழிவை தடுக்கலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
    தமிழ்நாடு

    பழைய சோறை தின​மும் சாப்பிடுவதால் புற்றுநோய், நீரிழிவை தடுக்கலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Minister Ma Subramanian
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     தின​மும் பழைய சோறு சாப்​பிட்​டால் புற்றுநோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்​கலாம். குறை பிரசவத்தை தவிர்க்​கலாம் என்று அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார்.

    சென்னை அரசு ஸ்டான்லி மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை​யில், இரைப்பை குடல் மற்​றும் கல்​லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்​றும் வாழ்​வூட்​டும் மருத்​து​வம் மற்​றும் ஆராய்ச்​சித் துறை சார்​பில் பழைய சோறு குறித்த அறி​வியல் கருத்​தரங்​கம் நடை​பெற்​றது.

    தொடர்ந்​து, கலாநிதி வீரா​சாமி எம்​.பி.​யின் தொகுதி மேம்​பாட்டு நிதி​யில் பல் மருத்​துவ பிரி​வில், புதிய மருத்​துவ உபகரணங்​கள் மற்​றும் புனரமைப்பு பணி​கள் நடை​பெற்​றதை மக்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்டு வந்​தார்.

    பின்​னர் அவர் பேசி​ய​தாவது: இரைப்பை குடல் மற்​றும் கல்​லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்​றும் வாழ்​வூட்​டும் மருத்​து​வம் மற்​றும் ஆராய்ச்​சித் துறை​யில் கடந்த 5 ஆண்​டு​களாக மருத்​து​வர் ஜெஷ்வந்த் தீவிர முயற்​சி​யின் காரண​மாக பழைய சோறு பற்றி பல்​வேறு ஆராய்ச்​சிகளை மேற்​கொண்​டுள்​ளார்.

    பழைய சோறில் பல்​வேறு சத்​துக்​களும் நல்ல பாக்​டீரி​யாக்​களும் நுண்​சத்​துக்​களும் இருப்பது கண்​டறியப்​பட்​டுள்​ளது. தின​மும் பழைய சோறு சாப்​பிடு​வ​தால் புற்றுநோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்​கலாம். குடலின் நல்ல ஆரோக்​கி​யம் மற்​றும் உடல் பரு​மன் ஏற்​ப​டா​மல் பார்த்​துக் கொள்​ளலாம். கர்ப்​பிணி​கள் பழைய சோறு சாப்​பிடு​வ​தால் குழந்தை நன்​றாக வளர்​கிறது.

    குறை பிரசவம், கர்ப்​ப​கால நீரிழி​வு, அதிக உயர் ரத்த அழுத்த நோய் வராமல் பாது​காக்​கிறது. இதய நோயி​லிருந்து காப்​பாற்​றுகிறது. ரத்த கொழுப்பு அளவு​களை குறைக்​கிறது. கல்​லீரலில் உள்ள கெட்​டக் கொழுப்​பு​கள் மற்​றும் ஆபத்​தான அமிலங்​களை கல்​லீரலில் இருந்து வெளி​யேற்ற உதவு​கிறது.

    அதிக வயிற்​றுப்​போக்கு உள்​ளவர்​களுக்கு குடலில் ஓர் அரணாக இருந்து நுண்​சத்​துக்​கள் மற்​றும் நீர்ச் சத்​துக்​கள் வெளி​யேறாமல் பாது​காக்​கிறது. வயிற்று வலி, மலச்​சிக்​கல், வயிறு வீக்​கம் போன்ற நோய்​களி​லிருந்து குண​மாக உதவு​கிறது. உடல் நலத்​துக்கு பாது​காப்​பான மிகச்​சிறந்த உணவாக பழைய சோறு இருக்​கிறது.

    பழைய சோறு தினம் குறித்து முதல்​வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் கலாநிதி வீரா​சாமி எம்​.பி., ஐட்​ரீம் இரா.மூர்த்தி எம்​எல்ஏ, சுகா​தா​ரத்​துறை செயலர் ப.செந்​தில்​கு​மார், தேசிய நலவாழ்வு குழும இயக்​குநர் அருண்​தம்​பு​ராஜ், மருத்​து​வக்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் சுகந்தி ராஜகு​மாரி, அரசு ஸ்டான்லி மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை டீன் அரவிந்த், மருத்​து​வ​மனை கண்​காணிப்​பாளர் ஜோதி​கு​மார், ஆர்​எம்ஓ வனிதா மலர், குடல் அறுவை சிகிச்சை பிரிவு இயக்​குநர்​ ஜெஸ்​வந்த்​ உள்​ளிட்​ட பலர்​ பங்​கேற்​றனர்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக அரசு எனக்கே ரூ.48,000 கொடுக்க வேண்டும்!. அண்ணாமலை தாக்கு!
    Next Article பிப்.27-ல் வெளியாகிறது ‘பியாண்ட் த கேரளா ஸ்டோரி’
    Editor TN Talks

    Related Posts

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    July 21, 2026

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    July 21, 2026

    “கர்நாடகா கழிவுநீரால் அழியும் தென்பெண்ணை!” – சாலையில் இறங்கிய விவசாயிகள்

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.