Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யின் வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட கோயில் நிலம்; இதுவும் லஞ்சம்தான்!. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    ஆம்புலன்ஸை திருடி லாரி மீது மோதி விபத்து!. போதை ஆசாமியால் பரபரப்பு!

    சொந்த தொகுதிக்கு செல்லும் முதல்வர் விஜய்!. பெரம்பூரை நவீனமயமாக்க ரூ.48 லட்சத்தில் மெகா பிளான்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பூரை தொடர்ந்து குமரியிலும்… ரிதன்யாவை தொடர்ந்து ஜெமலாவா?
    தமிழ்நாடு

    திருப்பூரை தொடர்ந்து குமரியிலும்… ரிதன்யாவை தொடர்ந்து ஜெமலாவா?

    Editor TN TalksBy Editor TN TalksJuly 5, 2025Updated:July 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 300 சவரன் நகை போட்டு, ரூ.70லட்சத்தில் கார் கொடுத்து, ரூ.5கோடி செலவில் பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணம் இரண்டரை மாதங்கள் தான் நீடித்தது. மீதமுள்ள 200 சவரன் நகைகளை கேட்டு கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் கொடுமை படுத்தியதாக தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ அனுப்பி வைத்து விட்டு ரிதன்யா விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.

    இதே போன்றதொரு சம்பவம் தற்போது குமரியிலும் நடந்துள்ளது. குமரி மாவட்டம் கருங்கல் அருகே திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளையை சேர்ந்தவர் ராபின்சன். இவருடைய 26 வயதான மகள் ஜெமலா, பி.எஸ்.சி நர்சிங் முடித்தவர். இவரும் இனயம் சின்னத்துரையை சேர்ந்த மரிய டேவிட் மகன் நிதின் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் ஜெமலாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

    பின்னர் காதல் ஜோடியின் உறுதியால், பின்னர் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால், கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து பெண் வீட்டார் சார்பில் கூண்டுவாஞ்சேரியில் புதிய வீடு கட்டி கொடுத்துள்ளனர். புதுமண தம்பதி இந்த வீட்டில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

    நிதின் ராஜ் பி.இ படித்திருந்தும், சரியான வேலை இல்லாமல் இருந்ததால், கணவன் -மனைவிக்கும் இடையே சிறு சிறு குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மதியம் 12 மணியளவில் ஜெமலாவின் பெற்றோருக்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்அதாகவும், அவருடைய உடல் கருங்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதின்ராஜின் உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    பதறியடித்து மருத்துவமனை சென்ற ஜெமலாவின் பெற்றோர் கதறி அழுதனர். தகவலறிந்த கருங்கல் போலீசார் சடலத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஜெமலாவின் தாயார் புஷ்பலதா கருங்கல் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியிருக்கிறார். அதனடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநான் பொறுமையா இருப்பதால குற்றவாளி இல்லை… அழுது கொண்டே நிகிதா வெளியிட்ட ஆடியோ..
    Next Article நாட்டு வெடிகுண்டு தயாரித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட 4 பேர்… ரவுடிகளை கொத்தாக தூக்கிய போலீசார்…
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யின் வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட கோயில் நிலம்; இதுவும் லஞ்சம்தான்!. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    July 11, 2026

    ஆம்புலன்ஸை திருடி லாரி மீது மோதி விபத்து!. போதை ஆசாமியால் பரபரப்பு!

    July 11, 2026

    சொந்த தொகுதிக்கு செல்லும் முதல்வர் விஜய்!. பெரம்பூரை நவீனமயமாக்க ரூ.48 லட்சத்தில் மெகா பிளான்!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யின் வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட கோயில் நிலம்; இதுவும் லஞ்சம்தான்!. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    ஆம்புலன்ஸை திருடி லாரி மீது மோதி விபத்து!. போதை ஆசாமியால் பரபரப்பு!

    சொந்த தொகுதிக்கு செல்லும் முதல்வர் விஜய்!. பெரம்பூரை நவீனமயமாக்க ரூ.48 லட்சத்தில் மெகா பிளான்!

    தேசியக் கட்சிகள் செய்தால் தவறில்லை.. மாநிலக் கட்சிகள் செய்தால் தவறா?. திருமாவளவன் கேள்வி!

    விம்பிள்டன் 2026!. ஜோகோவிச்சை வீழ்த்தி ஜானிக் சின்னர் அபாரம்!. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.