கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க மூத்த காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கக் உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழ்நாடு தலைவர் பி.சொக்கலிங்கம் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக், மோகன்ராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு எதிராக போக்சோ சட்டம் மற்றும் பி.என்.எஸ். சட்டத்தின் கடத்தல், கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பலியான சிறுமியின் தாய் அளித்த பேட்டியில் சிறுமி காணாமல் போனதும், காவல்துறையினரை அணுகியபோது குழந்தை பாதுகாப்பாக தங்கள் காவலில் இருப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்திருந்தார்; ஆனால் அதற்கு மாறாக சிறுமி கொலை செய்யப்பட்டு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது; இதனால் இந்த வழக்கை சுதந்திரமான அமைப்பு விசாரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி, சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட்டதைப் போல இந்த வழக்கிலும், சுதந்திரமான, வெளிப்படையான விசாரணைக்கு காவல்துறை மூத்த அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்; இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்கில் பரவிவரும் வீடியோக்கள் புலன் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுவதால், இந்த வழக்கு தொடர்பாக செய்திகள் வெளியிட அனைத்து வகையான ஊடகங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version