Close Menu
    What's Hot

    3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»குண்டுகட்டாக தூய்மை பணியாளர்கள் கைது… நீதிமன்றத்தில் வழக்கு… போராட தடையில்லை என உத்தரவு…
    தமிழ்நாடு

    குண்டுகட்டாக தூய்மை பணியாளர்கள் கைது… நீதிமன்றத்தில் வழக்கு… போராட தடையில்லை என உத்தரவு…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 14, 2025Updated:August 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூய்மை பணியாளர்கள் அனுமதி பெற்று போராட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் ராயபுரம், திரு.வி.கநகர் ஆகிய மண்டலங்களின் தூய்மை பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து கடந்த 1-ம் தேதி முதல் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தூய்மை பணியாளர்கள் மற்றும் அமைச்சர்கள் இடையே நடைபெற்ர 8 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால், போராட்டம் தொடர்ந்தது.

    இதற்கிடையே அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் நேற்று நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இந்த செயலுக்கு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூய்மை பணியாளர்கள் கைதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்தனர். அதில், ”சட்டக்கல்லூரி மாணவர் காணாமல் போய்விட்டார் எனவும், களத்தில் இருந்து அப்புறப்படுத்தும் போது காவல்துறையினர் அத்துமீறி செயல்பட்டதாகவும்” குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தூய்மைப் பணியாளர்கள் அனுமதி பெற்று போராட எந்தத் தடையுமில்லை என்றும் அனுமதியோடு போராட்டம் நடந்து, போலீசார் தடுத்தால் தலையிடலாம் எனவும் அனுமதி பெறவில்லை என தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் தெரிவித்ததால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் முறையீடு குறித்து மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரிக்கப்படும் என நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது. தூய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு மாற்று இடம் ஒதுக்கக் கோரி தலைமை நீதிபதி அமர்விலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னையை தொடர்ந்து ராமநாதபுரத்திலும்… வெடித்தது தூய்மை பணியாளர்கள் போராட்டம்…
    Next Article தூய்மை பணியாளர்கள் நலனுக்காக 6 புதிய திட்டங்கள்… அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு…
    Editor TN Talks

    Related Posts

    3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    June 20, 2026

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    June 20, 2026

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.