Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆதவ் அர்ஜுனா மீது வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு
    தமிழ்நாடு

    ஆதவ் அர்ஜுனா மீது வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tvkkk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் சம்பவம் தொடர்பாக வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக ஆதவ் அர்ஜூனா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அதை விமர்சிக்கும் வகையில் தவெக-வின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா, தனது சமூக வலைதளப்பக்கத்தில் இலங்கை, நேபாளம் போல தமிழகத்திலும் புரட்சி உருவாகும் என்ற வகையில் பதிவிட்டு இருந்தார். பின்னர் அந்தப்பதிவை 34 நிமிடங்கள் கழித்து அவரே அழித்து வி்ட்டார்.

    இதுதொடர்பாக பொது அமைதி மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்டுள்ளதாகக் கூறி ஆதவ் அர்ஜூனா மீது சென்னை சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதவ் அர்ஜூனா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக  நடந்தது.

    அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மற்றும் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆகியோர் வாதிடும்போது, ‘‘இலங்கை மற்றும் நேபாளத்தில் புரட்சி வெடித்தது போல தமிழகத்திலும் ஆட்சியைக் கவிழ்க்கபுரட்சி ஏற்படும் என்பதுபோல வன்முறையைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் தான் தவெக நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    எந்தச் சூழலில் எப்படிப்பட்ட கருத்துகளை யார் பதிவிடுகின்றனர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. கரூரில் பெரிய சோகமான நிகழ்வு அரங்கேறிய நிலையில் இப்படியொரு கருத்துகளை தனது வலைதளப்பக்கம் மூலமாக பதிவிட்டு அமைதிக்கு பங்கம் விளைவிக்க நினைத்ததால் அதை தடுக்கும் நோக்கிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. புகாரில் சந்தேகம் இருந்தால் மட்டுமே ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி அதன்பிறகு வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    அந்தப் புகாரில் முகாந்திரம் இருந்தால் நேரடியாக வழக்குப்பதிவு செய்வதில் எந்த தவறும் இல்லை. வெறுப்பு பேச்சு தொடர்பாக போலீஸாரே தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யலாம் என உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித் துள்ளது.

    வன்மத்தைக் கக்கும் நோக்கில் சமூக வலைதளத் தில் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பதிவிட்டு விட்டு பின்னர் அதை 34 நிமிடங்கள் கழித்து அவரே அழித்து விட்டார் என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கே்ார முடியாது.

    மனுதாரரின் பதிவை லட்சம் பேர் பார்த்துள்ளனர். எனவே அவர் மீதான வழக்கை சட்டப்பூர்வமாக சந்திக்கட்டும். இதற்கு உள்நோக்கம் உள்ளதாக அர்த்தம் கற்பிக்கக்கூடாது’’ என வாதிட்டனர். அப்போது குறுக்கிட்ட ஆதவ் அர்ஜூனா தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘மனுதாரர் பதிவிட்ட கருத்து வெறுப்பு பேச்சு என்ற வரம்புக்குள் வராது. கோபத்தின் வெளிப்பாடு தான் அந்த பதிவு. 18 மணி நேரம் கழித்தே போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இந்த இடைப்பட்ட நேரத்தில் எந்த வன்முறை சம்பவங்களும் நடைபெறவில்லை. அந்தப்பதிவின் இறுதியில் பாரதியார் கவிதையையும் குறிப்பிட்டுள்ளார். சர்ச்சையில் சிக்கக்கூடாது என்பதால்தான் பதிவை அவரே அழித்துள்ளார்.

    இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

    tvk#adav#case
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2011-ல் செய்த தவறுக்கு இப்போது அனுபவிக்கிறார் ஓபிஎஸ்! – வைகோ விமர்சனம்
    Next Article ஒரே பைக்கில் குடும்பமாக வந்த 5 பேர்! கோர விபத்தில் உயிரிழந்த தாத்தா மற்றும் பேத்தி!
    Editor TN Talks

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.