Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட பெண் குழந்தை: 3 மணிநேரத்தில் மீட்பு
    தமிழ்நாடு

    நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட பெண் குழந்தை: 3 மணிநேரத்தில் மீட்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bbbbb
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கடத்தபட்ட வடமாநிலத்தைச் சேரந்த பெண் குழந்தையை, 3 மணிநேரத்தில் போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ரஞ்சன் – முஸ்கா தம்பதி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள சவேரியார் தேவாலயம் முன்பு பலூன் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், சொந்த ஊர் செல்வதற்காக குடும்பத்துடன் நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு அவர்கள் வந்துள்ளனர்.

    அப்போது, ரயில் நிலையத்திற்கு வெளியே அமர்ந்திருந்த ஒருவர், குழந்தைக்கு உணவு வாங்கி தருவதாக கூறி, முஸ்கா உடன் இருந்த சாராவை தூக்கிக் கொண்டு ஓடினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரஞ்சன், அவரை துரத்தி பிடிக்க முயன்றார். ஆனால், அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்த ரஞ்சன் ரயில்வே போலீசாருக்கும், கோட்டார் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

    தகவலின் பேரில், ரயில்வே போலீஸ்சார் கோட்டார் போலீசாருடன் இணைந்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ரயில்வே நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், இளைஞர் ஒருவர் குழந்தையை தோளில் தூக்கிக்கொண்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், குழந்தையை கடத்திச் சென்றவர் நாகர்கோவில் மீனாட்சிபுரம் காந்தாரி அம்மன் கோயில் தெருவில் குடியிருக்கும் ஒரு தம்பதியினரின் உறவினரான யோகேஷ் குமார் என்பது தெரியவந்தது.

    மேலும், அந்த நபர் வடசேரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையுடன் நின்றிருந்த யோகேஷ் குமாரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் குழந்தையை மீட்ட போலீசார், அதனை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று, மருத்துவ பரிசோதனை மேற்கோண்டனர். பின்னர் குழந்தை பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    கைது செய்யப்பட்ட யோகேஷ் குமார்

    தொடர்ந்து, யோகேஷ் குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். யோகேஷ் குமாருக்கு குழந்தை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? குழந்தையை விற்பதற்காக அவர் கடத்திச் சென்றாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசபரிமலை அரவண பாயாசம் – ஒரு முறை வீட்டில் இப்படி செய்து ஐயப்பனுக்கு நைவேத்தியம் செய்ங்க!
    Next Article ஹைதராபாத்தில் டொனால்ட் டிரம்ப் சாலை!. புதிய பசுமைச் சாலைக்கு ரத்தன் டாடா பெயர் சூட்ட முடிவு!
    Editor TN Talks

    Related Posts

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    February 15, 2026

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    February 15, 2026

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    February 15, 2026

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    February 15, 2026

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    February 15, 2026

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.