Close Menu
    What's Hot

    கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு!. பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடல்!

    குட்டிகளுடன் ஊருக்குள் நுழைந்த பாகுபலி யானை கூட்டம்!. பொதுமக்கள் அச்சம்!

    2022ல் நடந்த பஞ்சாயத்து.. நாளை கோர்ட்டில் ஆஜர்..!! அமைச்சர் மரிய வில்சனுக்கு செக்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பொங்கல் பரிசுத் தொகை ரூ.5,000?
    தமிழ்நாடு

    பொங்கல் பரிசுத் தொகை ரூ.5,000?

    Editor TN TalksBy Editor TN TalksNovember 27, 2025Updated:November 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pongal prize
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
    2026ல் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இம்முறை ரொக்க பணம் வழங்கப்படலாம் என்ற பேச்சுக்கு மத்தியில் அது எவ்வளவு ரூபாய் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
    வருடம்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் சிறப்புத் தொகுப்பையும், பொங்கல் பரிசுத் தொகையையும் வழங்குவது வழக்கமான ஒன்று. அதன்படி, தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படும்.
    கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. அதன்பின் 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு 21 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அதுவே கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைகளின்போது பச்சரிசி, கரும்பு, சர்க்கரை ஆகியவை அடங்கிய தொகுப்புடன் 1000 ரூபாயும் வழங்கப்பட்டது.
    ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ரொக்க பணம் வழங்கப்படவில்லை. மாறாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே கொடுக்கப்பட்டது. இது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
    இந்த நிலையில் தான், 2026-ல் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனால் இந்தமுறை பொங்கல் தொகுப்பில் ரொக்க பணம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் பொங்கல் தொகுப்பு ரொக்க பணம் அதிகரிக்கலாம் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.
    அதாவது கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது பொங்கல் தொகுப்பில் அதிகபட்சமாக 2500 ரூபாய் ரொக்க பணமாக கொடுக்கப்பட்டது. இம்முறை இதனை தாண்டி 5000 ரூபாய் ரொக்க பணமாக கொடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
    தமிழகத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது இரண்டு கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருந்தனர். அந்தக் கணக்கில் பார்த்தால் கூட இவர்களுக்கு 5000 ரூபாய் வழங்குவதற்கு 11 ஆயிரம் கோடி தேவைப்படும்.
    ஏற்கனவே நிதி நெருக்கடி இருக்கும் நிலையில் தமிழக அரசு பொங்கல் தொகுப்பிற்கு இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கீடு செய்யுமா என்பது கேள்வியாக உள்ளது. இதனால் பொங்கல் தொகுப்பிற்கு 5000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சாத்தியமாகுமா என்பதும் கேள்விக்குறியே. இந்தக் கேள்விகளுக்கு அடுத்த மாதத்தில் இதற்கு விடை கிடைத்துவிடும்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாள் முழுக்க சுறுசுறுப்போடு இருக்கணுமா? இந்த 7 விஷயங்களை பின்பற்றினால் போதும்!
    Next Article ரகசிய இடத்தில் தங்கியிருந்த செங்கோட்டையன்
    Editor TN Talks

    Related Posts

    கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு!. பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடல்!

    July 3, 2026

    குட்டிகளுடன் ஊருக்குள் நுழைந்த பாகுபலி யானை கூட்டம்!. பொதுமக்கள் அச்சம்!

    July 3, 2026

    2022ல் நடந்த பஞ்சாயத்து.. நாளை கோர்ட்டில் ஆஜர்..!! அமைச்சர் மரிய வில்சனுக்கு செக்..!!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு!. பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடல்!

    குட்டிகளுடன் ஊருக்குள் நுழைந்த பாகுபலி யானை கூட்டம்!. பொதுமக்கள் அச்சம்!

    2022ல் நடந்த பஞ்சாயத்து.. நாளை கோர்ட்டில் ஆஜர்..!! அமைச்சர் மரிய வில்சனுக்கு செக்..!!

    “கொஞ்சம் உங்க பக்கத்துல பாருங்க…” – கனிமொழிக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

    தவெக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்? திருமாவை வலியுறுத்தும் ஆதவ்; சமரசத்திற்கு வராத காங்கிரஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.