2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். அதில், கப்பல் கட்டுமானத்தில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
தொழில் முதலீடு ஊக்குவிப்புத் துறைக்கு ரூ.4,882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளில் ரூ.10.70 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1943 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் ரூ.405 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு செமி கண்டக்டர் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை பரவலான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
கோவை மாவட்டத்தில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்க நகை பூங்கா பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை தரமணியில் செமி கண்டக்டர் மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.819 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழில் முதலீடு, வர்த்தகத்துறைக்கு ரூ.4882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர்வளத்துறைக்கு ரூ.10,076 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மின் தேவை எதிர்காலத்தில் இருமடங்காக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. பசுமை மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன் 1000 மெகாவாட் மின்கல சேமிப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் ராம்சார் தலங்கள் உள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள 100 காடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் ரூ.6121 கோடியில் ரூ.12,087 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
12 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1885 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.8313 கோடியில் 4 வழித்தடமாக அகலப்படுத்தப்படுகின்றன.
5 ஆண்டுகளில் அரசு போக்குவரத்துக்கழகத்தின் 3,673 பேருந்துகள் ரூ.361 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
ரூ.1791 கோடியில் கோவையில் ஜி.டி.நாயுடு பெயரில் உயர்மட்ட சாலை திறக்கப்பட்டுள்ளது.
புதிய சிற்றுந்து திட்டத்தின் மூலம் 6303 வழித்தடங்களில் சிற்றுந்து சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள் துறை, சிறுதுறைமுகங்கள் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.21,132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
1,168 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை இடையே ரூ.671 கோடியில் உயர்மட்ட சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
புதிய மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு நில எடுப்புப் பணிகளுக்கு அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது.
