Close Menu
    What's Hot

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    மோடியின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய்? ‘மாற்றம்’ என்ற பெயரில் அரங்கேறும் ஆர்.எஸ்.எஸ் நாடகம்!

    மொத்தமா அழிச்சிட்டேன்; ‘ஈரான் போரில் பெரும் வெற்றி’! டிரம்ப் பதிவால் பதற்றம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சமரசமான சங்கீதா!. அது நடந்து முடிந்த கதை!. விஜய்யின் தந்தை அதிர்ச்சி தகவல்!.
    தமிழ்நாடு

    சமரசமான சங்கீதா!. அது நடந்து முடிந்த கதை!. விஜய்யின் தந்தை அதிர்ச்சி தகவல்!.

    Editor web3By Editor web3April 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay Father SA Chandrasekar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எப்போதோ அவர்களுக்குள் சமரசமாகி கையெழுத்தான விஷயத்தை இப்போது கொண்டு வர வைத்திருக்கிறார்கள் என விவாகரத்து குறித்து SA சந்திரசேகர் பேசியுள்ளார். இது அரசியலாக்கப்படுவது எதிர்கட்சிகளின் திட்டம்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே நடந்த பிரச்னை பொதுவெளிக்கு வந்து விவாகரத்தில் நிற்கிறது. நேற்று செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் நேற்று அவர்கள் விவாகரத்து வழக்கு விசாரணைக்கும் வந்தது. அதனை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி. சூழல் இப்படி இருக்க இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேக இவ்வளவு பரபரப்புக்கு மத்தியில் பேட்டி கொடுத்து சர்ச்சைகளுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

    விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள்ளும், அவரது ரசிகர்களுக்குள்ளும் முதல்முறையாக விதைத்தவர் என்றால் அது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான். அதனால்தான் விஜய்யின் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட பணிகள் செய்ய வைத்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது தமிழக வெற்றிக் கழகமும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தனது அரசியல் பிரவேசத்தில் தந்தை எஸ்.ஏ.சியை பக்கத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை விஜய்.

    அவர் அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில் அவரை சுற்றி எக்கச்சக்க பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் தலையாயது என்றால் மனைவி சங்கீதா தாக்கல் செய்திருக்கும் விவாகரத்து மனுதான். விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து விவாகரத்து கோரியிருந்தார். நேற்று இந்த வழக்கானது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி. அன்றைய தினம் காணொலி மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டுமென்று கோரியிருக்கிறார் விஜய்.

    சங்கீதா பிரச்னை, திரிஷாவுடன் இணைத்து வைத்து பேசுவது, தந்தை, தாயை பக்கத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை உள்ளிட்ட பல விஷயங்களை விஜய்க்கு எதிராக வைக்கிறார்கள் எதிர்க்கட்சியினர். ஆனால் விஜய்யோ மேற்கூறிய அத்தனை விஷயங்களிலும் பட்டும் படாமல்தான் இதுவரை பேசியிருக்கிறார். அவர் அப்படி பேசியதையே அவருக்கு எதிராக முன்வைத்து; ஒருவருக்கு இவ்வளவு அலட்சியமும், தலைக்கனமும் கூடாது என்று பலரும் கருத்தை முன்வைத்தார்கள். மேலும் விஜய் ஏன் இன்னும் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார்கள்.

    இந்நிலையில் இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “நான், அவர், என் மனைவி மூன்று பேரும் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘நான் அரசியலுக்கு வருகிறேன்’ என ரொம்ப கேஷுவலாக கூறினார். அவர் அப்படித்தான். பெரிய விஷயத்தை எல்லாம் ரொம்ப சாதாரணமாக சொல்வார். அப்போது நான், ‘இப்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. அவர்களை எதிர்த்தவர்களை இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் என்ற லிஸ்ட்டை அவரிடம் கொடுத்தேன். நான் அதை எதிர்கொள்கிறேன் அப்பா என்று சொல்லிவிட்டார்.

    அதேபோல் அரசியலில் கேரக்டர் படுகொலையும் செய்வார்கள். விஜய் அவருடைய குடும்பத்துக்கு எதிரி, அப்பா, அம்மாவுக்கு எதிரி என்ற பிம்பதை செட் செய்கிறார்கள். அது அவர்களுக்கு கை வந்த கலை. எப்போதோ நடந்து முடிந்து சமரசம் ஆகி கையெழுத்தாகி முடிந்துபோன விஷயத்தை இப்போது ஏன் சரியாக வெளியே கொண்டு வருகிறார்கள். இதையெல்லாம் அவர்கள் அழகாக செய்வார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அதற்கான வாய்ப்பை கொடுக்கிறார்களா என்பது குறித்து எனக்கு தெரியாது” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; புகார் எண்கள் அறிவிப்பு!.
    Next Article ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிட முடியாது!. விஜய் அதிரடி!
    Editor web3
    • Website

    Related Posts

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    April 21, 2026

    மோடியின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய்? ‘மாற்றம்’ என்ற பெயரில் அரங்கேறும் ஆர்.எஸ்.எஸ் நாடகம்!

    April 21, 2026

    ‘இந்தியா மறக்காது’!. பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு!. ராணுவம் எச்சரிக்கை!.

    April 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    மோடியின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய்? ‘மாற்றம்’ என்ற பெயரில் அரங்கேறும் ஆர்.எஸ்.எஸ் நாடகம்!

    மொத்தமா அழிச்சிட்டேன்; ‘ஈரான் போரில் பெரும் வெற்றி’! டிரம்ப் பதிவால் பதற்றம்!.

    ‘இந்தியா மறக்காது’!. பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு!. ராணுவம் எச்சரிக்கை!.

    வாக்குக்கு ரூ.5,000!. கொள்ளையடித்த பணத்தை கோவையில் செலவழிக்கும் செந்தில் பாலாஜி!. வானதி அட்டாக்!

    Trending Posts

    இன்று (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    April 20, 2026

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    April 21, 2026

    மொத்தமா அழிச்சிட்டேன்; ‘ஈரான் போரில் பெரும் வெற்றி’! டிரம்ப் பதிவால் பதற்றம்!.

    April 21, 2026

    வாக்குக்கு ரூ.5,000!. கொள்ளையடித்த பணத்தை கோவையில் செலவழிக்கும் செந்தில் பாலாஜி!. வானதி அட்டாக்!

    April 21, 2026

    தமிழகம் இருண்ட நிலைக்கு போய்விட்டது!. அண்ணாமலை கண்டனம்!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.